உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கப்பலோட்டிய தமிழன், மாபொசி, ஐந்தாம்பதிப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கப்பலோட்டிய தமிழன்







வந்தாயா!' என்று அன்புடன் அணைத்துக் கொண்டார் சிவா. இதுவன்றோ நட்பு!

தன்

இராஜத் துவேஷக் குற்றத்திற்குத் தண்டனை பெற்ற காரணமாக, வ.உ.சி.யின்' வக்கீல் 'சன்னத்து' பறிமுதலாயிற்று. வருவாய்க்கு வேறு வழியின்றித் திண்டாடினார்.அந்நாளில் தமக்குற்ற கஷ்டத்தைக் குறித்துத் தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடித மொன்றில்,

வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரமன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண்

-

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான் நாச்சொல்லும் தோலும் நலிந்து.

எனக் கூறுகின்றார். சிறைக்கஞ்சாத அவர் நெஞ்சம் வறுமையை நினைந்து வாடியது. அவ்வறுமையிலும் கூட பிள்ளையவர்கள் பொதுநலப் பணியில் ஈடுபடத் தயங்கவில்லை. பெரம்பூர் ரயில்வேத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து அவர்களது நலன்களுக்காக பல ஆண்டுகள் பாடுபட்டார். ஏற் கனவே பறிக்கப்பட்ட வக்கீல் 'சன்னத்து' நீதிபதி இ. எச்.வாலஸ் என்பவரின் என்பவரின் பேருதவியால் திரும்பக் கிடைத்தது. பின்னர் சில காலம் கோவில்பட்டியில் தங்கி வக்கீல் தொழில் புரிந்து மீண்டும் தூத்துக் குடியை அடைந்தார்.

ஒத்துழையாமைக்கு எதிர்ப்பு

கிலாபத் அநீதி, பஞ்சாப் படுகொலை, உதவாக்கரை யான மாண்டேகு-- செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகிய