பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கமலாம்பாள் சரித்திரம் 311 சாணினுமுளனோர் தன்மையணு வினைச்ச தகூறிட்ட கேரணினுமுளன் மாமேருக்குன்றினு முளனிந்நின்ற தூணினுமுளன் முன் சொன்ன சொல்லினு முளனித் தன்மை காணுதிவிரைவில்,' என்று காட்டத் தூண்பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக்கண்டு திசைதிறந்தண்டங்கீறிச் சிரித்த செங்கட் சீயத்தைக் கண்டு கைகூப்பி , ஆடிப் பாடியரற்றி, உலகெலாந் துள்ளித்து கைத்த இளஞ்சேயொப்ப , யாமும் ஆடிப்பாடி ஒடவேண்டு மென்பதே யன்றி வேறன்று. பொன்னம்மாளது சூழ்வினையினும், சங்கரியது கொலைத்தொழிலினும், சுப்புவின் கலகத்திறத்தினும், நடராஜனது விவர மறியா இளமையிலும் ராம சேஷய்யரது வாஞ்சா ரூபமான முதுமையிலும், லட் சுமி ஸ்ரீநிவாசனது மனோதர்ம விசேஷத்திலும், கம லாம்பாளது பக்தி வைபவத்திலும் முத்துஸ்வாமியய்ய ரது ஆத்மானந்தத்திலும் எங்கும் சமமாய், சாட்சி யாய், ஏகமாய், பூரணமாய், நித்தியமாய், நன்றாய்ஞானகனமாகி நானாவெல்லாம் பிறப்பிடமா யொன்றாய் வேறோர் பொருளின்றி யொளியா யொன்றோடு தன்றா யகில சராசரங்கட்கா தாரந்தானாயென்றும்] வமிப்ப பொன்றாத்துவாய் விகாரப்பொருளாய்ப் புலனாய்ப் புணர்ப் [பரிதாய் 'உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் நாம் காண்போம். கமலாம்பாள் போல புத்தி யாலறியொண்ணாய் புராணனைப் பத்தியாம் வலையிற் படுத்து ' கன்றினுக்குச்சே தாகனிந்திரங்கல் போலெனக் கென்றிரங்கு வாய்கருணை யெந்தாய்பராபரமே' என்று அருட்டாகங்கொண்டு 'கன் குறுணிலாக்கனியகுத்தமாயவ னின்று நம்மானுள் வருமேலவன் வாயிற் கொன்றையந்திங்குழல் கேளாமோதோழீ '