பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



312 கமலாம்பாள் சரித்திரம் என்றவன் புராண வைபவங்களில் மயங்கி, • கீளார்கோவணமும் திருநீரும்' என்றவன் மூர்த்திலாவண்யத்தி லீடுபட்டு ' ஊடுவது முவப்பதும் நின்னோடே' எனத் தன்னையும் ஜகத் தையும் மறந்து, சொல்லாலேவாய் துடிப்ப தல்லானெஞ்சந் துடித்திருகணீரருவி சொரியத்தேம்பி கல்லாலேயிருந்தநெஞ்சங்கல்லான் முக்கட் கனியேநெக்குருகிடவுங்காண்பேன் கொல்லோ' எனத் தனையே நொந்து நொந்து நெஞ்சங் கரைந் துருகி, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் முசுவண்டறை பொய்கையும் போறதேன் ஈதுனெந்தை யினையடி நீழலே என்று விசேஷிக்கப்பட்ட அவாங்மன கோசரமான அவ்வடி நிழலில் ஓய்வடைவோம். அல்லது முத்து ஸ்வாமி அய்யரைப்போல ' வேண்டேனிம்மாயப் புன் பிறவி வேண்டேனே' என உலக விரக்தி பெற்றுக் கிருமிமுதல் கிரகங்கள் வரை சலியாது சஞ்சரிக்கின்ற பகவானுடைய சித்விலாஸச் சிறப்பில் எந்தக்கேவலமான பிராணியும் அநாதியாய் விடப்பட வில்லை யென அறிந்து அஞ்ஞானங்கழல் சத்ருவைச் சேர்ந்து வழிபட்டு அஹம்ப்ரஹ்மாயாதி மகா வாக்கியங்களை விசாரணை செய்து அப்பியாச பலத்தி னால் ஆத்மஸ்வரூபத்தை தீர்க்கமாகத் தரிசித்து 'பாகற்காய்க்காகப் பங்கை விற்ற கதையைப்' அற்ப மான உலக இன்பங்களின் பொருட்டு விலையற்ற ஆத்மலாபத்தை விலைப் படுத்தாது 'மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே ' என்றபடி. மன் மிறக்கக்கற்று உலகவாஞ்சைகளை யொழித்துச்