பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கம்பன் எடுத்த முத்துக்கள் அப்படி இருந்தும், இராவணனை வெல்லும் ஆற்றல் படைத்தி வாலியிடம் செல்லுமாறு கூறாமல் சுக்கிரீவனிடம் செல்லுமாறு சவரி பணித்தது ஏன் மிகச் சிறப்பான ஒரு காரணம் இதனுள் மறைந்துகிடப்பதை அறிய வேண்டும் சவரியைப் பொறுத்தமட்டில் 'இராவணனை வெல்லுவதற்கு வாலியின் துணையைப் பெறுக என்று கூறியிருக்கலாம் அவ்வாறு செய்வதில் மாபெரும் பிழையொன்று ஏற்படும் பிறன்மனை நயந்தவனாகிய இராவணனைத் தண்டிக்கட் பிறன்மனை நயந்த மற்றொருவ னாகிய வாலியைத் துணைச் கொண்டான் இராமன் என்ற பெரும்பழி வருவதற்குச் சவரி காரண மாகிவிடுவாள். வாலியைப்பற்றி ஒன்றும் அறியாத இராகவனை அவனிடம் போகுமாறு பணிப்பது பெரும் பிழையாகும். இவ்வழி தவறு என்றால், சவரி மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். சவரி இராகவன் யாரென்று அறிந்தவள். அவன் கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவர்ை (4023) என்பதை நன்கு அறிவாள். எனவே சுக்சிரீவனுடைய குரக்குப் படை இராமனுக்குத் தேவை இல்லையென்பது உண்மைதான். இராகவன் தனியே சென்று இராவணனிடம் போரிட்டால், இராவணனை வென்றிருக்கலாம். ஆனால், அவனுடன் நட்புக் கொண்ட வாலி இராவணனுக்குத்துணையாகிக் களத்தில் இறங்கினால் இராகவனுக்கே பெரும் தொல்லையாக முடியும். காரணம் வாலி, ' கிட்டுவார் பொரக் கிடைக்கின் மற்றவர் பட்ட நல்வலம் பாகம் எய்துவான்” என்ற உண்மை தெரியாக இராகவன், சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். எனவே இந்த இரண்டு வழிகளையும் தவிர்த்துச் சுக்கிரீவனைத் துணை கோருமாறு வழி கூறினாள் சவரி. அன்றியும் சீதையைத் தேடுதல் இராம இலக்குவர் ஆகிய இருவர்மட்டுமே செய்யக்கூடிய செயலுமன்று. மேலும் தொண்டு என்ற ஒரு பொருளுக்கு முழு இலக்கணமாக வாழ்கின்ற அனுமனின் துணையும் தசரத குமாரர்க்குக் கிட்டாமல் போய்விடும் அனுமன் சுக்கிரீவனிடம் பணி புரிகின்றவ னாதலின் சுக்கிரீவன் துணையை அனுமன் பொருட்டாக இராமன் நாட வேண்டியதாயிற்று.