பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 143 புதிதாகவே இருக்கும். இஞ்ஞானத்தைப் பெறுவதற்கு முன் காணப்பட்ட அதே நிகழ்ச்சி, ஞானம் பெற்றபின்னர் வேறு மனநிலையை உண்டாக்குகிறது. நிகழ்ச்சி ஒன்றுதான். ஆனால், அதைப் பார்ப்பவனுடைய மனநிலை மாறிவிட்டதால் காட்சி அனுபவமே மாறிவிடுகிறது. இப் பார்வை கிடைக்குமுன்னர் இராமன் பகைவனாக இருந்தான், அறவேலியைப் படுத்தான்' (403) மறைந்து இருந்து அம்பு எய்து வில்லறம் துறந்தான்' என்ற முடிவுகள் அறிவு பெற்றபின்னர் முற்றிலும் மாறிவிடுகின்றன. இப்பொழுது வாலி என்று யாருமில்லை. அம்பு என்று ஒன்றுமில்லை. குற்றம் என்று ஒன்றுமில்லை. குணம் என்று ஒன்றும் இல்லை. மறைந்திருந்து அம்பு எய்தல், நேரே நின்று அம்பு எய்தல் ஆகியவை அர்த்தமற்ற வேறுபாடுகள்; வில்லறம் என்ற ஒன்று தனியே இல்லை. பற்றற்ற பரம்பொருள் ஒன்றைச் செய்யுமானால் அச்செயலுக்கு ஒரு நோக்கம் கற்பிப்பது - நேரே பொருதல், மறைந்து நின்று பொருதல் என்ற வேறுபாடுகளைக் கற்பிப்பது என்பவையெல்லாம் தவறாகும். இந்தப் பார்வை வந்தபிறகு உலகத்தில் வாழ்ந்தால் பகை, நட்பு என்று பாராமல் அன்பினால் அணைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க முடியாதபடி சாவு வந்து விட்டதே என்று வருந்துகிறான். - இந்த அறிவு பெறும்முன்னர்ச் சாவு வந்திருப்பின் வாலி கவவைப்பட்டிருக்கமாட்டான். அற்புதமான இறையனுபவம் கிடைத்தும் அந்த அனுபவத்தோடு இவ்வுலகிடை வாழமுடியாமல் போயிற்றே, வாழமுடியாமல் போகிறதே என்பதுதான் அவனுடைய ஏக்கம். ஜென்மப் பகை என்ற சுக்கிரீவன், அன்புத் தம்பியாகக் காட்சி அளிக்கிறான். காரணமின்றித் தன்னைக் கொன்ற பகைவனாகிய இராகவன், வில்லறம்துறந்தான் என்று ஏசப்பட்ட இராகவன் இப்பொழுது மூலப் பரம்பொருளாகக் காட்சி அளிக்கிறான். இதனை அனுபவிக்கவும் உலகிடை உள்ள உயிர்களிடம் சம நோக்கால் வந்த அன்பைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பில்லாமல் போகிறதே (சாவு காரணமாக என்பதே அவனுடைய ஏக்கம். இவ் அருளைப் பெறாத சுக்கிரீவன்