பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i48 கம்பன் எடுத்த முத்துக்கள் ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால், பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில், தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் (4068) பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் காணும்போது வாலியின் அறிவுத்திறமும், , எதிரது கண்டு போற்றும் நுண்மாண் நுழைபுலமும் அவன் தம்பிமாட்டுக் கொண்ட ஈடு இணையற்ற அன்பும் நன்கு வெளிப்படுகின்றன. வாலியைப்பற்றி இதுவரை கூறிவந்தவை கம்பனுடைய "சான்றோர் கவியெனக் கிடந்த சில பாடல்களில் புதைந்து கிடக்கும் உட்பொருளை அடியொற்றி எழுந்த சிந்தனைக்கு வடிவு கொடுத்தமையே ஆகும். இக்கருத்துகள் காட்டப்பெற்ற பாடல்களில் வெளிப்படையாக எங்கும் காணப்படா. முன்னும் பின்னுமாக உள்ள பாடல்களை ஒன்று கூட்டி வாலி என்ற பாத்திரப் படைப்பின் துணுக்கத்தை ஆய முற்பட்டதன் விளைவே ஆகும். இது இராம என்ற பதக்தைக் காண்பதற்கு முன்னுள்ள வாலிக்கும் சிறியன சிந்தியாத வாலிக்கும் இடையே உள்ள வளர்ச்சியைக் கூறியதே ஆகும் இது. இந்த வளர்ச்சி சில மணித்துளிகளில் நடைபெற்றதாகும். அம்பு பட்டதே விதையாகி இராம. என்ற பெயரைக் கண்டதே செடியாக வளரத் தொடங்கிய நிலையாகி, கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்றதைக் கண்ணுற்றான் வாலி என்ற நிலையில் அந்தச் செடி மரமாக வள்ர்ந்துவிட்டது. ஆனாலும், இந்த விதை விதைப்பும், அது செடியாகி மரமாதலும் வாலியின் புற மனத்திற்குத் தெரியாமல் அவனுடைய அக மனத்தின் ஆழத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஆகும். அக மனத்தின் ஆழத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற அதே நேரத்தில் வாலியின் புற மனத்தில் ஒரு பெரும் போராட்டமே நிகழ்கிறது. * . . . அப்போராட்டத்தின் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்பவற்றைச் சற்று விரிவாகக் காண்பது பயன் உடையதாகும். சுக்கிரீனுடன் போருக்குப் புறப்படுமுன் தடுத்து நிறுத்திய தாரையிடம் வாலி பேசிய பேச்சுகள் தசரத