பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - f7; வேறுபாடு இருப்பதையும் அறியவில்லை. வாலியின் முற்பகுதி உரையாடல் பிற்பகுதி உரையாடல் என்பவற்றின் மூலமே இராகவன் அவற்றை அறிந்துகொண்டான். - நுண்மாண் மிக்கவனும், தேர்ந்த அரசியல் ஞானியும், எதிர் நிற்பவனை ஒரு கணத்தில் எடைபோட வல்லவனும் ஆகிய தசரதன் தோன்றல் வாலியின் உரையாடலை வைத்துக்கொண்டே இவன் இத்தகையவன்' என்பதையும் அவன் அரசாட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் ஒரு விநாடியில் அறிந்துகொள்கிறான். அவனுடைய வருத்தத்திற்கும், அங்கதனிடம் நீ இது பொறுத்தி என்று கூறுவதற்கும் இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது. சுக் கிரீவனுக்கு முடிசூட்டி அவனைக் கிட்கிந்தைக்கு அனுப்பும் போது அவன் அரசியல் அறிவோ, புலமையோ, ஞானமோ அறிந்தவன் அல்லன் என்பதை அறிந்திருந்த இராமன் அரசனுக்குரிய அறவுரைகள் பலவற்றை அரசியற் படலத்தில் (4121 முதல் 4131 முடிய) 11 பாடல்களில் சுக்கிரீவனுக்குக் கூறுகிறான். எல்லையற்ற செல்வம் திடீரென்று வந்தால் அத் னைக் காத்தலும் வகுத்தலும் எவ்வளவு கடினமானது என்பதைக் (4.124) கூறுகிறான். இத்துணை அறவுரைகள் கூறும் இராகவன் வாலியைப் பற்றியும், அவன் அரசாட்சியைப்பற்றியும் சுக்கிரீவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால், அதே நேரத்தில் சுக்கிரீவனை அனுப்பிய பிறகு அனுமனைத் தனியே அழ்ைத்து அச்சொல்லின் செல்வனிடம் துண்மையான கருத்து ஒன்றை இராகவன் பேசுவது நமது சிந்தனைக்குரிய ஒன்றாகும். நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஒர் தலைமகன் வலிதின் கொண்டால் அரும்புவ, நலனும், தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல் பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது - - அம்மா! (4143) இப்பாடலின் ஆழமான பொருளையும் அது பாடப்பட்ட நிலைக்களம், சூழ்நிலை என்பவற்றையும் புரியாமலே பலர்