பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 கம்பன் எடுத்த முத்துக்கள் உரையெழுதி உள்ளனர். நிரம்பினான் என்பது அனைத்துப் பண்புகளும், ஆட்சித் திறமையும் உள்ளவனாகிய வாலியைக் குறிப்பதாகும். அவனால் ஆட்சி செய்யப்பெற்ற அரசு எவ்விதக் குறையும் இல்லாத நிறை அரசு என்று கூறுகிறான் இராகவன், எல்லாச் செல்வங்களும் எல்லையில்லாமல் நிறைந்துள்ள அவ் ஆட்சியை, மற்றோர் தலைமகனாகிய சுக்கிரீவன் வலிதிற் பற்றித் தனதாக்கிக் கொண்டான். இவன் ஆட்சி செய்யும் பொழுது பழைய ஆட்சிபோலில் லாமல் நன்மையோடு தீமையும் கலந்தே தோன்றும். அதாவது மக்கள் பழைய ஆட்சியின் சிறப்பையும், புதியவன் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஆதலினால் நிரம்பினான் செய்த நல்லரசு போல நிரம்பாத புதியவன் செய்யும் ஆட்சி அமையாது. ஆதலால் அங்கே மனக் கசப்பும் புரட்சியும் தோன்றக் கூடும். (அரும்புவ நலனும் தீங்கும்). “அதனைத் தடுக்கவேண்டு மானால் அமைச்சருக்குரிய பண்புகள் அனைத்தும் நிரம்பிய பண்புள்ளவனும், எதிரது போற்றும் நுண்மாண் நுழைபுலம் உடையவனும், சொல்லின் செல்வனும், தரும வடிவினனும் ஆகிய உன்னைப் போன்ற அமைச்சர்கள் இருந்து அப்பாரத்தைத் தாங்குவதே முறைமையாகும்” என்று அனுமனிடம் கூறும்பொழுது, வாலியின் ஆட்சிக்கு இராகவன் தரும் நற்சான்றிதழ் "நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு" என்பதாகும். வாலியின் பெருமை தெற்றெனத் தெரியவே, இராகவன் மனம் கசிவதாயிற்று, வில்லறம் துறந்து வாலியைக் கொன்ற செயலுக்கு இராகவன் வருந்தியிருத்தல் வேண்டும். அவ்வருத்தத்தைப் போக்கிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாலியின் உயிரை மீட்டுத் தருவதாகும். "ஆருயிர்துறக்கல் ஆற்றேன்” (381) என்று சொல்லிக்கொள்ளும் சுக்கிரீவனைப் போல வாலிக்கு உயிர்மேல் ஆசையில்லை என்பதை வீட்டரசு எனக்கு நல்கினான் எம்பி, என்ற வாலியின் கூற்றால் இராமன் நன்கு அறிந்துகொண்டான். அப்படியானால் தன் செயலுக்கு வருந்தும் மனநிலையை எவ்வாறு வாலிக்குத் தெரிவிப்பது என்று எண்ணம் உற்றான் போலும், இராகவன் தன் கருத்தை வாலிக்கு வெளிப்படுத்த