பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கம்பன் எடுத்த முத்துக்கள் வதைத்தது வரை, கும்பன் முதலானவர்களையும் வென்றது வரை இராமனுக்குத் துணையாக நின்றது அறம் ஒன்று மட்டுமே ஆகும். இதைக் கூறவந்த கம்பநாசிடன் தான் மட்டும் இக்கருத்தைக் கூறுவதாக இல்லாமல், இராமன் கூற்றாகவும் இக்கருத்தை வலியுறுத்துகிறான். முதற் போரில் வெகு வீரத்துடன் வந்த இராவணன், வீரமும் களத்தே போட்டு வெறுங்கையுடன் நிற்கிறான். அவனைப் பார்த்து அறத்தின் மூர்த்தியாகிய இராமன் கூறும் சொற்கள் நினைவில் பதிக்க வேண்டியவை. 'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ்சமம் கடத்தல் மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி' . . . . . . . . . . . . - . . (7267) யுத்த காண்டத்திற்கு 5000 பாடல்களைக் கம்பன் ஒதுக்கியதின் இரகசியம் இதுவே ஆகும். இனி, அகிம்சையும், பொறுமையும் அனைவராலும் கைக் கொள்ளப்பட வேண்டும்.வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தப்பெறும் இக்காலத்திற்குக் கம்பநாடன் காப்பியமே தேவையா என்று கேட்பவர்கள் சிலர் உண்டு. எல்லாப் பொருள்களையும் வன்முறை என்று பொருள் செய்வதால் வரும் தவறான முடிவாகும் இது ஒருவருடைய முதுகிலோ, மார்பிலோ ஒரு சிறிய கத்தியால் கிழித்தால், அது வன்முறை என்றும், கொலைக் குற்றம் என்றும் கூறப்படும். ஆனால், அதைவிடப் பெரிய கத்தியைக் கொண்டு ஒருவருடைய வயிற்றைக் கிழித்து அறுவை மருத்துவம் செய்கின்றார் ஒரு மருத்துவர். அதை யாரும் வன்முறை என்றோ, கொலை என்றோ கூறுவதில்லை. ஒருவரை வாழவைப்பதற்காக அறுவை மருத்துவம் செய்யப்படுகின்றது. மக்களைக் கொடுமைப்படுத்தி, தன்னலம் ஒன்றிற்காகவே பிறர்க்குத் துயர் விளைவிக்கும் ஒருவனை, அவன் அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, கொல்வது அறமே அன்றி, மறம் அன்று. அபலைப் பெண்கட்கும், குழந்தைகட்கும் கொடுமை இழைக்கப்பட்டபோது ஆண்மை உடையவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களை வாளேந்திக் கொல்வது அறமே