பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 29. "எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய - - கோவுக்கு அடுத்தது" என்று, என்னை வல்லை அழைத்திலை, அரவின் பாசம் தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க, 6Tសា கெடுத்தனை விடன! நீ" - - (8227) என்று இராமன் பேசுகிறான். 仁恕 இந்நிகழ்ச்சியில் வீடணன்மேல் குறைகற எந்தக் காரணமும் இல்லை. நாகாஸ்திரத்தை இந்திரசித்தன் பயன்படுத்துவான் என்று வீடணன் எதிர்பார்க்கவில்லை. தேவர்களிடம் பெற்ற நாகாஸ்திரம் இலக்குவனை ஒன்றும் செய்யாது என்றும் வீடணன் கருதியிருத்தல் வேண்டும். அதனால்தான் அவன் இராமனை அழைக்கவில்லை. அப்படி இருந்தும், தம்பியை இழந்துவிட்டோம் என்ற துயரத்தில், இராமன் பேசிய பேச்சுக்களாகும் இவை, ஆனால், இவ்வாறு பேசிய இராகவன், கருடன் வந்து, நாகபாசத்தின் பிடியிலிருந்து அனைவரையும் மீட்டவுடன் தான் அவசரப்பட்டு வீடணனைக் குற்றங்கூறியதை நினைத்து வருந்துகிறான் என்று நினைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நினைக்கத்தக்க காரணம் ஒன்று உண்டு. நிகும்பலை அழித்து, இந்திரசித்தனை வென்று, அந்த வெற்றிப் பெருமிதத்தோடு இந்திரசித்தன் தலையையும் எடுத்துக்கொண்டு இலக்குவன், அனுமன், வீடணன் ஆகிய மூவரும் இராமனைக் காண வருகின்றனர். இலக்குவன் வெற்றியை அறுபட்ட தலையின் மூலம் அறிந்துகொண்ட இராமன் மனநிலையையும் அவன் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் இருந்ததையும் கம்பன் படம்பிடித்துக் காட்டுகிறான். தலையினை நோக்கும்; தம்பி கொற்றவை தழீஇய - - பொன்தோள் மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்: