பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 29 பால காண்டம் உலக மகா காப்பியங்களுள் தலைசிறந்து விளங்கும் கம்பநாடனுட்ைய இராம காதை ஆறு காண்டங்களாக வகுக்கப்பெற்றுள்ளது. முதல் காண்டம் பால காண்டம் எனப் பெயர் பெறும். வால்மீகி முனிவரின் இராமாயணத்தைப் பெரும்பாலும் அடியொற்றி, அதே நேரத்தில் வேண்டுமான இடங்களில் மாற்றம், திருத்தம் முதலியன செய்து, கம்பன் தனக்கேயுரிய முறையில் இராமாயணத்தைப் படைத்துள்ளான் என்பதைப் பலரும் அறிவர். - வால்விகியினுடைய Η Ι Τ ζή) காண்டத்தைப் பொறுத்தமட்டில், அது அவர் இயற்றியதுதானா அல்ல்வா என்ற ஐயப்பாடு இன்றளவும் இருந்துவருகிறது. ஆனா கம்பனைப் பொறுத்த மட்டில் அத்தகைய பிரச்சினை ஒன்று இல்லை. பால காண்டம் அவனுடையதுதான் என்பதி, எந்தவித ஐயமும் இல்லை. - அதே நேரத்தில், மிகச் சிறந்த காப்பியமாக இருந்தாலும், இராம காதை நாடு முழுவதும் பரவியிருந்த காரணத்தாலும், பெளராணிகர்கள் இராமாயணத்தை அதிகம் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட காரணத்தாலும் கம்பனுடைய இராமாயணத்திலும் சில பிரச்சினைகள் தோன்றலாயின. தனித்தனியே பல்வேறு இடங்களிலிருந்து பிரவசனம் செய்கின்றவர்கள் தங்களுக்குத் தேவையான பகுதிகளைப் புதியனவாகப் பாடிச் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இடைச்செருகல்களுக்குப் பஞ்சமே இல்லை. பால காண்டத்திலும்கூட இடைச்செருகல்கள் பல உண்டு. அவற்றை நன்கு ஆராய்ந்து கம்பன் கழகத்தார் சிலவற்றை 'மிகைப் பாடல்கள் என்று பின்னே கொடுத்திருக்கிறார்கள். என்றாலும், பல படலங்களில் உள்ள சில பாடல்கள் கம்பனுடையனவா என்று ஐயப்படக் கூடிய நிலையில் உள்ளன. இவ் ஐயப்பாடு இன்னும் நீங்கவில்லை என்பது. ஒருபுறம். (சான்று திரு அவதாரப் பட்லம் 6 முதல் 28 வரை).