பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 59 அயோத்தியா காண்டம் கம்பனுடைய இராம காதையில் இரண்டாவதாக அமைந்துள்ள்து அயோத்தியா காண்டமாகும். இராம காதையின் வளர்ச்சி முழுவதற்கும் உள்ள கருவைத் தாங்கி நிற்பது அயோத்தியா காண்டமாகும். இந்தக் காண்டம் மந்திரப் படலத்தில் தொடங்கி, 'திருவடி சூட்டு படலத்தில் முடிகின்றது. கதைப் போக்கில் இந்தப் பெயர்கள் அமைந்திருந்தாலும், கதையை மறந்துவிட்டுப் பெயர்களைமட்டும் எடுத்துக் கொண்டால் கூட, ஒரு புதுமையான சிந்தனையைத் தோற்றுவிக்கின்றது. மந்திரத்தில் தொடங்கினால் திருவடி சூடலில் முடியும்' என்ற எண்ணத்தை நம்முடைய மனத்தில் தோற்றுவிப்பது போல இந்தப் படலங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. அயோத்தியா காண்டத்தில் ப்ாத்திரங்கள் என்று சொல்லப்படுபவை மிகக் குறைவானவையே யாகும். இராமன், இலக்குவன், சீதை என்ற மூவரும் நீங்கலாக தசரதன், கூனி, கைகேயி, பரதன் என்ற நான்கு பாத்திரங்கள்தாம் இக் காண்டம் முழுவதும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. இடையில குகன் வருகின்றான். அவனும் மிக முக்கியமான பாத்திரம்தான் என்பதில் ஐயமில்லை. ஆக, இந்த பாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மிகப் பெரிய அயோத்தியா காண்டம் நடைபெறுகின்றது. கம்பனைப் பொறுத்தமட்டில் மூலநூலிலுள்ள கன்யா கல்கக் கதையை முழுவதுமாக மறைத்துவிட்டான். தசரதன் கைகேயியைத் திருமணம் செய்துகொள்ளும்பொழுது, 'உன்னுடைய வயிற்றில் பிறக்கும் மகனுக்குப் பட்டத்தைத் தருகிறேன்' என்று அவளிடம் அப்போது சொல்லியிருக்கிறான். அதனை இப்போது கைகேயி நினைவூட்டுகின்ற நிலையில் இருக்கிறாள். அவன் வாய்மை தவறி விடாதிருக்க ஏற்கெனவே நீ அப்படிச் சொல்லியிருக்கிறாயே, என்று சொல்லிக்