பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.சஞானசம்பந்தன் 69 'உன் கழுத்தில் அணிந்திருக்கும் மங்கல நாண், உன் மகன் கைக்குக் காப்பு நாண் ஆகக் கடவது' என்று தசரதன் கூறிய பொழுதும்கூட, ஒருத்தி பிடிவாதமாகத் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்றான் என்றால், இது வெறுந் தாய் அன்பினாலோ தன் மகனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ எடுத்த முடிவாகச் சிந்திப்பதற்கில்லை. பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டு மென்றால் உன் கழுத்திலுள்ள திருமாங்கல்யச் சரடே அவன் கைக்குக் காப்பாகக் கடவது என்று கணவனாகிய தசரதன் சொல்லிவிட்டான் என்றால், இதைவிடப் பெரிய சாபத்தைப் பெற்றுக் கொண்டு, பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்று கைகேயி நினைத்தாள் என்று நினைப்பது அவளுடைய அறிவுக்கும், பண்புக்கும் பொருத்தமில்லாத தாகப் படுகின்றது. ஆகவே, வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தைத் தன் அடிமனத்தில் வைத்துக்கொண்டு, அதனை வெளியில் சொல்ல முடியாத நிலையில், தன்னுடைய கணவனாகிய தசரதனைப் பெருங் குற்றத்திலிருந்து காப்பாற்றவேண்டு மென்று நினைக்கின்றாள் கைகேயி என்று நினைப்பது பொருத்தமுடையதோ என்று தோன்றுகிறது. இராமனது அவதார நோக்கத்தை அவள் அறிந்திருந்தாள் என்று சொல்வதற்கில்லை. இராகவன் காட்டிற்குச் செல்வது தான் அவன் பிறந்ததனுடைய நோக்கம், என்பதைக் கைகேயி அறிந்திருந்தாள் என்று சொல்வது கதைப் போக்கில் இடிைனு விளைவிக்கும். ஆகவே, அந்தக் கருத்தை விட்டுவிடலாம். அவளைப் பொறுத்தமட்டில் தசரதன் தன்துச்சிடய திருமணத்திற்கு முன்னால் கொடுத்த வாக்கை மீறி கன்யா சுல்க்கம்) இப்பொழுது அதற்கு மாறுபட்ட ஒரு காசியத்தைச் செய்யத் தொடங்குகிறான். இதனைச் செய்து முடிபோனே யானால் உலகமுள்ளளவும் தசரதனுடைய பெர்பெரும் பழிக்கு உள்ளாகும். அதுமட்டு மல்ல, பெரும் புகலத்திற்கும் அவன் ஆளாவான். பரம்பொருளை மகனாகப் பெற்றங்கூ!