பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт – 6ӘСІБ «Qрғытшй шптіsosu —ost costfisитеғайт 596 அந்த மலையை விலக்கி நீர் மேவும் தொண்டை நாடு செல்லுங்கள். அதைக் கடந்து பொன்னி என்னும் சிறப்பு மிக்க தண்புனல் தெய்வத்திரு நதியின் இருகரைகளிலும் சென்று சீதையைத் தேடுங்கள் என்று கூறும் போது காவிரியைத் தண் புனல் தெய்வத்திரு நதியென்று கம்பன் பொன்னியின் சிறப்பை உச்சத்திற்குக் கொண்டு போயிருக்கிறார். "துறக்கம் உற்றார் மனமென்னத் துறகெழு நீர் சோணாடு கடந்தால், தொல்லை மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந் துறை வர் அவ்வழி நீர் வல்லை ஏகி, உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வி தனாடும் ஒதுங்கி மணியார் ஒங்கல் பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ் நாட்டில் பெயர் கமாதோ!" சோழ நாடு சென்று அதைக் கடந்து மலைநாடு நாடி அங்கிருந்து தமிழ்நாடு சேருங்கள் என்று கூறுகிறார். பாண்டிய நாட்டையே கம்பன் இங்கு தமிழ் நாடு என்று குறிப்பிடுகிறார். சங்கம் வளர்த்த காரணத்தால் பாண்டிய நாட்டைத் தமிழ்நாடு என்று கம்பர் பெருமை படக் குறிப்பிடுகிறார் போலும், மலைநாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போது யாரும் தங்கள் தொல்லைகளை மறப்பதற்காக இங்கு வந்து மறைந்து வாழ்வார்கள் என்று குறிப்பிடுகிறார். அத்தனை வளமும் அழகும் சிறப்பும் உள்ள நாடு மலைநாடு என்னும் சேர நாடாகும். அங்கிருந்து பாண்டிய நாடு செல்லவும் என்று குறிப்பிடுகிறார். "தென்தமிழ்நாட்டு அகன் ாதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்த்ற் பீரேல் என்றும் அவண் உறை விடமாம் ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிப் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையெனும் திருநதி பின் பொழிய, நாகக்