பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusiz — «РФ «Qрғылшй шптіъюви –-гу: «Rofkалғай 486 மிகச் சிறந்த வல்லமை மிக்க வீரன். பலவான், துணிவு மிக்கவன், கடமைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், நீதி அறிந்தவன், அறம் உணர்ந்தவன், சகோதர பாசமும் இரக்க குணமும் நிறைந்தவன். இந்த மாவீரனை இராமன் நன்கு புரிந்து கொண்டு, அரசியல் நுட்பத்துடனும், உத்திகளுடனும், அவனைக் கையாண்டு, அவனுடைய கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான். வாலியைப் போலவே கும்பகருணனும் இராமனுடைய கணையால் ஞானமும் அருளும் பெற்று வீடு பெறுகிறான். கும்பகருணனுடைய முடிவுடன் இராம இராவண யுத்தத்தின் ஒரு அத்தியாயம் முடிவடைகிறது. கும்பகருணன், போர்க்களத்தில் மாண்ட செய்தியைக் கேட்டு இராவணன் மிகுந்த துயரமடைந்தான். இதுவரை தோல்வியே கண்டறியாத ஒரு மாவீரன் தன் உடன் பிறந்தோன் தனது இரத்தத்துடன் இணைந்தவன், போர்க்களத்தில் ஒரு மனிதன் கணையால் மாண்டான் என்னும் செய்தி அவனை அதிகமாக வருத்துகிறது. இராவணன் கும்பகருணனுடைய மரணத்தால் அடைந்த தியரத்தைப் பற்றிக் கம்பன் தரும் கவிதைகள் அற்புதமானவை. “வல் நெஞ்சின் என்னை நீ, நீத்துப் போய் வான் அடைந்தால் இன்னும் சிலரோடு ஒரு வயிற்றில் யார் பிறப்பார்? மின் அஞ்சுவே லோய்! விழி அஞ்சி வாழ் கின்றார் தம் நெஞ்சம் தாமே தடவாரோ? வான வர்கள்?” “கல் அன்றோ நீராடும் காலத்து உல்கால் தேய்க்கும் மல் ஒன்று தோளாய் வடமேரு? மானுடவன் வில்லொன்று நின்னை விளித்துளது என்னும் சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது தோன்றால்? ”