பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவடி பிரம்ம லோகம் வரை சென்றது. பிரமதேவன் அத் திருவடிகளுக்குத் திருமஞ்ச மாட்டுவித்தான். அதுவே கங்கை ஆயிற்று. அப்புண்ணிய தீர்த்தத்தைப் பிரமன் தனது கமண்டலத்தில் ஏற்றுக் கொண்டான். பகீரதனின் முயற்சியால் அது பூமிக்கு வந்தது.

𝑥𝑥𝑥𝑥

மைந்த—சக்கரவர்த்தி திருமகனே! இ மா நதி—சிறந்த இம் மா நதி, ஆதி—ஆதி மூலமாகிய திருமால்; அண்ட கோளகைக்கு அப்புறத்து—அண்ட கோளங்களுக்கு அப்பாலும் அளந்த அன்று—அளந்த அந்தக் காலத்திலே; மென் புண்டரீக மலரிடைப் பிறந்து–மென்மை பொருந்திய திருவடியாகிய தாமரையிலே (ஶ்ரீ பாத தீர்த்தமாகத்) தோன்றிய; பூ மகனார்—பிரமதேவன்; கொண்ட தீர்த்தமாய்—தனது கமண்டலத்திலே ஏந்திய புண்ணிய தீர்த்தமாகி; பகீரதன் தவத்தினால் கொணர —பகீரத மன்னன் தனது தவ வலிமையினாலே கொண்டு வர: மண்தலத்தின் வந்து அடைந்தது—பூமிக்கு வந்து சேர்ந்தது.

𝑥𝑥𝑥𝑥

ன்று கூறலும் வியப்பினோடு
        உவந்தனர் இறைஞ்சிச்
சென்று தீர்ந்தனர்; கங்கையை
        விசாலை வாழ் சிகரக்
குன்று போல் புயத்து அரசன்
        வந்து இணையடி குறுக
நின்று நல்லுரை விளம்பி
        மற்று அவ்வயின் நீங்கா

15