பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117


பெண்களின் கண் வீச்சிலே மயங்கி உழலும் ஆடவர் என்ன செய்கின்றனர்? ஆசையோடு ஓடுகின்றனர். கண் வீசிய பெண் கழுத்தளவு நீரில் மூழ்கி முகம் காட்டுகிறாள் என்று எண்ணி மிகுந்த ஆசை கொண்டு ஓடுகின்றனர்.

அருகில் சென்று பார்த்தால் பெண் இல்லை; முகமும் இல்லை; ஏமாந்தனர். ‘நமது ஆசை வீணாயிற்று’ என்று மனம் வெறுத்துத் திரும்புகின்றனர்.


𝑥𝑥𝑥𝑥

பட்டம் – நெற்றிப் பட்டம் அணிந்து; வாள் நுதல் – ஒளி பொருந்திய நெற்றியுடன் விளங்கும்; மடந்தையர்—பெண்களின்; பார்ப்பு எனும் பார்வை என்ற; தூதால்—தூதினாலே (உந்தப்பட்டு) எட்ட—அவர்களை எட்டிப்பிடிக்க; ஆதரித்து – விரும்பி; உழல்பவர் – திரிகின்ற ஆண்களின்; இதயங்கள் – மனம்; வெறுப்ப—வெறுப்படையும் வண்ணம்; வயல் இடை– வயல்களிலே; மள்ளர்—வேலை செய்யும் உழவர்கள்; கட்ட காவி களை பிடுங்கி எறிந்த நீலமலர்கள்; (அயலிடத்து நீர் நிலையிலே உள்ள) வட்டம் நாள் மரை — வட்ட வடிவமாக அன்று அலர்ந்த தாமரை மலர்கள் மேல் படிந்து; அம்கண் கிடை காட்டுவ—பெண்களின் அழகிய கண்கள் போல் காணப்பட்டனவாம்.


னைய நாட்டிடை இனிது சென்று
        இஞ்சி சூழ் மிதிலைப்
புனையு நீள் கொடிப் புரிசையின்
        புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து உயர்
        மாதவன் பன்னி
கனையும் மோட்டு உயர்
        கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்