பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26



நாயகன் அல்லன்; நம்மை
      நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணத்
      தாங்குதி தாங்குவாரை.


இவ்விதம் நீ பாதுகாக்கும் போது சிலருக்கு அச்சம் போய் விடும். “அரசன் நம்மிடம் அன்புள்ளவன், நல்லவன்; எது செய்தாலும் நம்மைத் தண்டிக்க மாட்டான் என்ற எண்ணம் ஏற்படும்.

நாட்டுக்குத் தீங்கு செய்வார்கள். அப்படித் தீங்கு செய்வோரிடம் நீ அன்பாயிருப்பது தவறு. சிறிதும் தயங்காமல் அவர்களை தண்டிப்பாய்; அறவழி நின்று தண்டிப்பாய்.

ஆயது தன்மை யேனும்
      அற வரம்பு இகவா வண்ணம்
தீயன வந்த போது
      சுடுதியால் தீமையோரை

எவர்க்கும் தீயன செய்யாதே. அதே சமயத்தில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யத் தவறாதே. உன்னைப் பற்றிப் பிறர் கூறும் வசை மொழிகளுக்குப் பதில் கூறாதே. எவர் கூறிய போதிலும் சரி. பதில் வசை கூறாதே. வசை இல்லாத இனிய சொற்களே கூறுவாய். உண்மையே பேசு; வழங்குதற்குரிய பொருள்களை வழங்கு பிறர் பொருள் கவர நினையாதே. இந்தப் பண்புகள் உன்னை உயர்த்தும்; எனவே இவை செய்வாய்.