31
கரனும் பிறரும் மாய்ந்ததை மறந்தான்; தங்கையின் மூக்கை அறுத்தவன் திறனையும் மறந்தான்; அதனால் விளைந்துள்ள அவமானத்தையும் மறந்தான்; சிவனையும் வெற்றி கண்ட காமனின் அம்பினால் தாக்கப்பட்டுத் தான்பெற்ற வரனையும் மறந்தான்.
○○
கேட்ட மங்கையை மறந்திலாதான்– இவ்வாறு சூர்ப்பணகை கூறக் கேட்ட சீதை எனும் மங்கையை மறந்திலாத இராவணன்; கரனையும் மறந்தான்– தம்பியாகிய கரன் மாண்டதையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்தும் நின்றான் உரனையும் மறந்தான்– தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்த பின்னரும் நிற்கும் வீரனின் வலிமையையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்– அதனால் தனக்கு நேர்ந்த இழிவையும் மறந்தான்; அரனையும் கொண்ட– சிவனையும் வெற்றி கண்ட; காமன் அம்பினால்– மன்மதன் கணையினால்; முன்னை வரனையும் மறந்தான்– முன்பு தான் பெற்ற சிறந்த வரத்தையும் மறந்தான்.
○○
“செந்தாமரைக் கண்ணோடும்
செங்கனி வாயினோடும்
சந்தார் தடந்தோளொடும்
தாழ் தடக்கைகளோடும்
அம்தார் அகலத்தொடும்
அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அவ்வல்வில்
இராமன்” என்றான்.
சூர்ப்பணகையோ இராமனையே எண்ணி எண்ணி இரவு முழுவதும் தூங்கவில்லை. இராவணன் கண்முன் எப்படி