பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


உனக்குப்‌ பெருந்துன்பம்‌ வரப்‌ போகிறது. அப்படியிருந்தும்‌ அதை அறியாமல்‌ தூங்குகிறாய்‌” என்று இடித்துக்‌ கூறினாள்‌ கூனி.

“நால்வர்‌ பிள்ளைமார்‌ இருக்கும்‌ போது எனக்கு எத்தகைய துன்பம்‌ வரப்‌போகிறது” என்று பதில்‌ கூறினாள்‌ கைகேயி, அவ்விதம்‌ கைகேயி கூறவும்‌,

“வீழ்ந்தது உன்‌ நலன்‌; வீழ்ந்தது உன்‌ செல்வம்‌; கோசலை புத்திசாலி. வாழ்வும்‌ திருவும்‌ பெற்று விட்டாள்‌” என்று இலேசாக வத்தி வைத்தாள்‌ கூனி.

ஆழ்ந்த பேர்‌ அன்பினாள்‌–இராமனிடத்து ஆழ்ந்த பேரன்பு கொண்ட சைகேயி; அனைய கூறலும்‌–அவ்வார்த்தை கூறலும்‌; சூழ்ந்த தீவினை நிகர்‌ கூனி; தீவினை சூழ்ந்தது போன்ற கூனி; சொல்லுவாள்‌–பின்வருமாறு சொல்லத்‌ தொடங்கினாள்‌; வீழ்ந்தது நின்‌ நலம்‌–உனது நலன்‌ அழிந்தது; திருவும்‌ வீழ்ந்தது–செல்வமும்‌ அழித்தது; கோசலை மதியினால்‌ வாழ்ந்தனள்‌–கோசலை தன்‌ புத்தியினால்‌ வாழ்ந்தாள்‌; என்றாள்‌–என்று சொன்னாள்‌.

சிவந்த வாய்ச்‌ சீதையும்‌
        கரிய செம்மலும்‌
நிவந்த ஆசனத்து இனிது
        இருப்ப, நின்‌ மகன்‌
அவந்தனாய்‌ வெறு நிலத்து
        இருக்கல்‌ ஆனபோது
உவந்தவாறு என்‌ இதற்கு?
        உறுதியாது? என்றாள்‌.