பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78



நின்ற நின் நிலை இது
        நெறியிற்று அன்று எனா
வன் தறு கண்ணினள்
        வயிர்த்துக் கூறுவாள்.

இவ்வாறு இளைய பெருமாள் கூறிய உடனே என்ன ஆயிற்று? சினம் பொங்கிய சீதைக்கு தன்னைக் கொன்று விட்டது போலும் துயரம் மேலிட்டது; உள்ளம் கொதித்தது; உறுத்து விழித்தாள் “உன் அண்ணனின் அலறல் கேட்டும் நீ விரைந்து ஓடினாய் அல்லை; சிறிதும் மனம் பதறாமல் நிற்கின்றாய். உனது இந்த நிலை நியாயமா? நல்நெறியா? அடுக்குமா?” என்று சில கடும் சொற்களை அள்ளி வீசினாள்.

என்று அவன் இயம்பலும் – என்று லட்சுமணன் கூறியதும்; எழுந்த சீற்றத்தள் – சினம் பொங்கியவளாய்; கொன்று அன தன்னைக் கொன்றதே போலும்; இன்னலள் – துன்பமுடையவளாய்; கொதிக்கும் உள்ளத்தள் – கொதிக்கின்ற மனம் உடையவளாய்; வன்தறு கண்ணினள் – வலிய வீரத் திரு பார்வையுடையவளாய்; (லட்சுமணனை நோக்கி) நின்ற நின் நிலை இது – உன் முன்னவனின் அலறல் கேட்டும் சிறிதும் நிலை தளராமல் இங்கு நிற்கின்றாயே இது; நெறியிற்று அன்று – நல்ல நெறியாகுமா? ஆகாது. எனா – என்று; வயிர்த்துக்கூறுவாள் – கடுமையான சொற்கள் சில கூறத் தொடங்கினாள்.

“ஒரு பகல் பழகினார்
        உயிரை ஈவரால்
பெருமகன் உலைவுறு
        வெற்றி கேட்டும் நீ