111
காமாந்தகாரம் கொண்ட இராவணனுடைய சொற்கள் தனது காதுகளிலே விழாதவாறு தன் காதுகளை இறுக மூடிக்கொண்டாள் சீதை.
“பூமியிலே நல்லொழுக்கத்தைச் சிந்தியாத அரக்கனே! வெற்றி வில் ஏந்திய காகுத்தன் கற்பரசியாகிய என்னை என்ன சொன்னாய்? தவ முனிவர்கள் தாம் வளர்க்கும் அக்னியிலே அளிக்கும் பவித்ரமான அவியை உண்ண நாய் விரும்பியது போல என்ன வார்த்தை சொன்னாய்?”
◯◯
செவிகளை – தன் இரு காதுகளையும்; தளிர் கையாலே – மெல்லிய தன் இரு கரங்களாலே; சிக்கு உற – அழுத்தி; சேமம் செய்தாள் – (இராவணனுடைய சொற்கள் காதிலே விழாதபடி) பாதுகாத்துக் கொண்டவளாய் (அவனை இகழ்ந்து நோக்கி) அரக்க – அரக்கனே; புவியிடை – பூமியிலே; ஒழுக்கம் – (உள்ள நல் ஒழுக்கத்தை, நோக்காய் – நாடாதவனே? கவினும் வெம் சிலை வென்றிக்கை – வெற்றி தரும் கொடிய வில்லேந்திய கையனாகிய; காகுத்தன் கற்பினேனை – காகுத்தனுடைய கற்பு மிக்க மனைவியாகிய என்னை? புனிதர் – பரிசுத்தராகிய முனிவர்கள்! பொங்கு எரி – கொழுந்து விட்டு எரியும் தீயிலே; ஈயும் – தேவர்க்கு அளிக்கும்; அவியை – அவியை; நாய் வேட்டது என்ன – இழிவாகிய நாய் ஓன்று விரும்பியது போல (நீ விரும்பி) என் சொனாம் – என்ன சொன்னாய்; என்னா – என்று கூறி (மேலும் சொல்வாள்);
◯◯
“புல் நுனை நீரின் நொய்தாய்
போதலே புரிந்து நின்ற
இன் உயிர் இழத்தல் அஞ்சி
இற்பிறப்பு அழிதல் உண்டோ?