பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


வீராகவன் புகழினை - இராமபிரானின் புகழை; செவிக்குத் தேன் என - கேட்போர் காதிலே தேன்போலும் இனிமையாக, திருத்தும் - திருத்தமாகத் தெரியப்படுத்தும்; கவிக்கு நாயகன் - வானரத் தலைவனான அநுமன்; அவித்து நின்று - தன் கோபத்தைத் தனித்துக்கொண்டு நின்று; ‘எவனாகிலும் ஆக' - இங்குக் கிடப்பவன் எவன் ஆகிலும் ஆகட்டும்; என்று - என்று கூறி, சில பகல் நீங்கிட என்பது கருதி - சில காலம் இப்படியே கிடக்கட்டும் என்று எண்ணி; அங்கை கவித்து - தன் உள்ளங்கை கவித்துக் கூறி, அனையவன் - அக்கும்பகன்னனின்; உறையுளை - மாளிகையை; கடந்தான் - தாண்டிச் சென்றான்.


***

மாட கூடங்கள் மாளிகை
        ஓளிகள் மகளிர்
ஆடு அரங்குகள் அம்பலம்
        தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டி மண்டபம்
        முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன் புகழ்
         எனும் நலத்தான்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எங்கும் சுற்றினான்; தெருக்களில் திரிந்தான்; மகளிர் ஆடும் அரங்குகள் கண்டு நோக்கினான்; அம்பலங்களில் பாரித்தான்; தேவாலயங்களில் தேடினான்; இசை மேடைகளில் இருப்பாளோ சீதை என்று நோக்கினான்.

***


மாட கூடங்கள் - மண்டபங்களின் சிகரங்களும்; மாளிகை ஓளிகள் - மாளிகைகளின் வரிசைகளும்; மகளிர் ஆடு அரங்குகள் - மாதர் ஆடும் நாட்டிய சாலைகளும்;