பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116



இறங்கின நிறங்கொள்
        பரி, ஏமமுற எங்கும்
கறங்கின மறங் கொள்
        எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறுங் குழலர்
        அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர்
        ஊடினர்கள் அல்லார்.

பல நிறங்கொண்ட குதிரைகள் உறங்கின; மதில் காவல் வீரர் தம் முரசங்கள் ஒலிப்பது நின்றது. கணவனுடன் ஊடல் கொண்டவரே உறங்காதிருந்தனர். காதலர் அன்பில் பிணைப்புண்டவர் உறங்கினர். அர்த்த ஜாம பறைகள் மட்டும் முழங்கின.

***

நிறங்கொள் பரி - பலவித நிறங்கொண்ட குதிரைகள்; இறங்கின - தலை சாய்த்து உறங்கின; மறங்கொள் எயில் காவலர் - வீரமுடைய மதில் காவலர்; துடிக்கண்- (அடிக்கும்) இரவு காவல் பறையின் முழக்கம்; ஏமம் உற - சாமத்துக்கு ஒரு முறை முழங்கின; எதிர் பிணங்கி ஊடினர்கள் - கணவரோடு ஊடல் கொண்டவர்கள்; அல்லார் - அல்லாதவர்களான; அன்பர் பிரியாதோரும் - தங்கள் காதலரைப் பிரியாதோரும்; பிறங்கின நறுங்குழலார் - விளக்கமும் மணமும் கொண்ட கூந்தல் உடைய மகளிரும்; உறங்கினர் - உறக்கம் கொண்டனம்.

***

இவ்விதம் சீதா பிராட்டியைத் தேடித் தெருதெருவாகச் சுற்றினான் அநுமன். அழகியதோர் மாளிகை தனித்திருக்கக் கண்டான். அதன் அழகை வியந்தான்.