பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


அரிய மஞ்சினோடு அஞ்சனம்
        இவை முதல் அதிகம்
கரிய காண்டலும் கண்ணில் நீர்
        கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதல் ஒருவரோடு
        ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயிர் உருவு
        கொண்டாலன்ன பிணியாள்.

அந்தச் சீதை காண்பதற்கு அரிய கருமேகங்களைக்கண்ட போதும், நல்ல கருமையான மை முதலியவற்றைக் கண்ட போதும் இராமனை நினைத்துக் கண்ணீர் சொரிவாள். காரணம் பிரிவு ஆற்றாமை.

***

அரிய மஞ்சினோடு - அருமையான மேகத்தோடு; அஞ்சனம் முதல் - மை முதலான; இவை அதிகம் கரிய காண்டலோடும் - இவை போன்ற மிகக் கரு நிறமுடைய பொருள்களைப் பார்க்குமிடத்தும்; கண்ணில்நீர் கடல் புகக் கலுழ்வாள் - (இராமபிரான் திருமேனியை நினைத்து) கண்ணீர் ஆறாகப் பெருகிக் கடலில் போய்ச் சேர வருந்தி அழுவாள்; உலகின் - இவ்வுலகத்தில்; உரிய காதலர் ஒருவரோடு ஒருவர் - உரிமையாகக் கொண்ட காதலர் ஒருவர்பால் மற்றொருவர்; பிரிவு எனும் துயர் - பிரிதல் எனும் துன்பமே; உருவு கொண்டால் அன்ன - ஒரு வடிவம் கொண்டுள்ளது போன்ற; பிணியாள் - நோயுடையவளாய் இருந்தாள்.

***

துப்பினால் செய்த கையொடு
        கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான் தனை நினை தொறும்
        நெடும் கண்கள் உகுத்த

கி.—9