பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223


ஆசில் பரதாரம் அவை
         அம் சிறை அடைப்பேம்;
மாசில் புகழ் காதல் உறுவேம்;
         வளமை கூரப்
பேசுவது மானம்; இடை
         பேணுவது காமம்;
கூசுவது மானுடரை;
         நன்று, நம் கொற்றம்.

“பிறர் மனைவியைக் கொண்டு வந்து சிறை வைப்போம்; ஆனால் புகழ் வேண்டும் என்று ஆசை கொள்வோம்; மானம் என்று பேசுவோம்; ஆனால் காமத்தைப் போற்றுவோம், வீரம் பேசுவோம்; ஆனால் மானிடரைக் கண்டு கூசுவோம். இவ்விதம் முரண்பட்ட செயல்களே செய்கிறோம். நமது ஆட்சி எவ்வளவு நன்றாயிருக்கிறது!”

***

ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம் குற்றமில்லாத பிறன் மனைவியை நமது சிறையில் அடைப்போம்; மாசில் புகழ் காதல் உறுவோம் - குற்றமற்ற புகழை விரும்புவோம்; வளமை கூரப் பேசுவது மானம் - வளம் பெருகப் பேசுவதோ மானம்; பேணுவது காமம் - ஆதரிப்பதோ மானக் கேடான காமம். (இவ்வண்ணம் ஒன்றுக்கொன்று முரணாக செயல்புரிவதனால்) கூசுவது மானுடரை - கூச்சம் கொள்வது மனிதரைக் கண்டு. நன்று நம் கொற்றம் - நமது வெற்றி ஆட்சி நன்றாயிருக்கிறதே.

***

சிட்டர் செயல் செய்திலை;
        குலச் சிறுமை செய்தாய்;
மட்டவிழ் மலர்க் குழலினாளை
        இனி, மன்னா!