பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இராமாயண ஸார ஸங்க்ரகம்

ங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்து அஷ்டமி திதியில் மாலைக் காலத்தில் இலங்கை நகரத்தில் இருந்த சுவேலை மலைமீது வானர சேனைகளுடனே ஏறி, அன்றிரவே அந்த நகரை முற்றுகையிட்டான் இராமன். மறுநாள் நவமி. அன்று பகற் பொழுதுக்குமேல் அரக்கரோடு போர் தொடங்கினான். யுத்தம் ஏழு நாள் நடைபெற்றது.

ஏழாம் நாள், அமாவாசை அன்று பிற்பகல் இராவணன் வதையுண்டான்.பிறகு பிரதமை. இராவணனுக்கு ஈமக்கடன் நிறைவேறியது. துவிதியையன்று விபீடணப் பட்டாபிஷேகம். திருதியையன்று சீதை நெருப்பில் புகுந்துவந்து இராமனையடைந்தாள்.

மறுநாள் சதுர்த்தி. விபீடணன் அளித்த புட்ப விமானத்தில் ஏறி வானரமகளிரை அழைத்துக் கொண்டு மறுநாள் பஞ்சமியன்று பாரத்துவாசர் ஆசிரமம் சேர்ந்தான்.அன்றைய தினமே பதினான்கு ஆண்டுகள் முடிகிறபடியால் தன் வருகையை அறிவிக்கும்படி அநுமனைப் பரதனிடம் போக்கினான் இராமன்.

அயோத்தியை அடைந்தான். திருமுடிசூட்டு விழாவும் நடந்தது.

இவ்வாறு இராமாயண ஸார ஸங்க்ரகம் கூறுகிறது.