49
மா இயல் வடதிசை
நின்று மானவன்
ஓவியமே என ஒளிக்
கவின் குலாம்
தேவியை நாடிய முந்தித்
தென்திசைக்கு
ஏவிய தூது என
இரவி ஏகினான்.
சித்திரம்போல ஒளிகொண்ட ஞாயிறு, சீதை தேவியை தேட அநுமன் முதலியோர் தென்திசை செல்லும் முன்பே, தான் செல்வதுபோல், தெற்கே கார்காலத்தில் ஏகினான்.
***
ஓவியமே என - சித்திரத்தில் எழுதிய பிரதிமையே போல; ஒளிகவின் குலாம் - ஒளியோடுகூடிய அழகு விளங்கப் பெற்ற; தேவியை - தன் மனைவியான சீதையை; நாடிய - தேடும் பொருட்டு;முந்தி - (அநுமன் முதலிய வானரர்களை அனுப்புதற்கு) முன்னமே; வானவன் - தேவாதி தேவனான இராமன்; தென்திசைக்கு ஏவிய தெற்கு திக்கிற்கு அனுப்பிய; தூது என - தூதன் போல; இரவி - சூரியன்; மா இயல் வட திசை நின்று - மங்கல திசையாகிய வடக்கில் இருந்து; ஏகினான் - (தெற்கு திசைக்கு) செல்லலானான்.
கார்காலம் வந்தது.இராமன் விரக தாபத்தால் வாடினான்.இயற்கைக் காட்சிகள் அவனை வாட்டின. லட்சுமணன் அவனைத் தேற்றினான்.
மழைக்காலம் கழிந்தும் சுக்கிரீவன் தன் சேனைகளோடு வாக்களித்தபடி வராதது கண்டு, கோபங்கொண்டு லட்சுமணனை கிட்கிந்தைக்கு அனுப்பினான்.
கி.—4