பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஆரண்ய காண்டம்

 

இங்கே - தண்டகாரணியத்திலே அன்னைக்கு அணிகலன்கள் கொடுக்கும் அனசூயையும், அன்னைக்குத் தொல்லை தரும் விராதனையும் காண்கிறோம். சூர்ப்பணகை, கரன், மாரீசன் ஆகிய அரக்கர் முடிவை பார்க்கிறோம். சீதாபிராட்டியைத் தூக்கிச் சென்ற இராவணனுடன் வீரமாக பொருது உயிர் நீத்த கழுகரசன் சடாயுவை மறக்கமுடியுமா?

இராகவனும் இளவலும் அன்னையைத் தேடிச் செல்கையில் நிகழ்ந்தவைகளுக்கு சிகரம் என அமைகிறது சபரியின் பிறப்பு நீங்குபடலம்.