பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81



நாகாலயங் களொடு
        நாகர் உலகும் தம்
பாகர் மருங்கு துயில்
        என்ன உயர் பண்ப
ஆகாயம் அஞ்ச
        அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு
        தென்றலென நின்ற

அந்த இலங்கை மாநகர், மாட மாளிகைகளின் நடுவே தேவர் வாழும் மாளிகைகளும் இருப்பன போல உயர்ந்த தோற்றத்தை அளித்தது. வலிய காற்றும் அம் மாட மாளிகைகளால் தடுத்து வலியிழக்கப் பெற்றது; தென்றல் போல் மெல்லென வீசியது.

***

(அம் மாடங்கள்) நாகாலயங்களோடு - தேவர் வாழும் மாளிகைகளோடு கூடிய; நாகர் உலகம் - தேவலோகமும்; தம் - இலங்கையிலுள்ள மாடங்களின்; பாகு ஆர் மருங்கு - தம் பகுதியாய் விளங்கும் இடை நிலத்தில்; துயில் என்ன - தங்குவன என்று சொல்லும்படியாக; உயர்பண்ப - உயர்ந்து நிற்கும் தன்மை உடையனவாக; ஆகாயம் அஞ்ச - வானம் அஞ்சும்படி; அகல்மேருவை அனுக்கும் - அகன்று நிற்கும் மேருமலையை வருத்தி, நிலை தளரச் செய்யும்; மா கால் - பெருங்காற்று; வழங்கு சிறு தென்றலென நின்ற - மென்மையாக வீசும் சிறிய தென்றல் காற்று எனும்படி வலியிழக்கச் செய்து அவை நின்றன.

***


மாகாரின் மின்கொடி
        மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும்
        நறும் துகள் விளக்கி

கி,—6