பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

165


இயற்கையினில் பத்து வகை
     எல்லோரும் பாடிடுவர்
செயற்கை அழகில்லாமல்
     செப்பிடுவீர் கடல் அழகை
என்றெழுதி யிட் டழைத்து

     என்னை இங்கே நிறுத்தியுளார்.


அன்னதனை,

நன்றுரைக்கும் வாய்ப்பினையோ
     நானறியேன் என்றாலும்
அரங்கின்றி வட்டாடும்
     ஆற்றல் மிகவுண்டு
கறங்காய்ச் சுழலுதற்கும்

     காதல் பெரிதுண்டு.


ஆதலினால்

செயலாளர் அன்பினுக்கும்
     செம்மனத்தோர் தண்ணளிக்கும்
வயமாகத் தலைவணங்கி
     வழுத்துவேன் சிலவார்த்தை.
கம்பனது காவியத்தில்
     காணுகின்ற கடலழகு
பம்பிப் பரந்துளதைப்

     பாரறியும் நீரறிவீர்.


ஆதலால்,

அன்னதனை விரித்துமது
     அவகாசம் கவராது
என்றனது வாழ்க்கையிலே

     எனக்கும் கடலுக்கும்