பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

கம்பன் சுயசரிதம்

நேர்ந்த உறவதுதான்
     நிமிர்ந்து வளர்ந்தவிதம்
சீராக ஒரு சிறிது
     சொல்வேன் செவி சாய்ப்பீர்.

சின்னஞ் சிறுவயதில்
     சிறுதிவலை மழைகண்டால்
வன்னச் சிறுதாளால்
     வாகாய் நடந்துவந்து
தெருவீதி தனிலோடி
     தெள்ளேணம் கொட்டி
ஒரு சிறிதும் கூசாமல்
     உல்லாச மனத்துடனே
ஓடுகின்ற தண்ணீரில
     உள்ளிறங்கி, உடல் நனைந்து
பாடுகின்ற சிற்றோடைப்
     பண்ணுக்குத் தாளமிட்டு
வாடுகின்ற பயிர்வளர்க்கும்
     வளங்குறையா மழையினிலே
ஆடுகின்ற அனுபவத்தை

     அந்நாளில் பெற்றவன்நான்


இம்மட்டோ,

காகிதத்தில் கப்பல் செய்து
     கற்களெனும் சரக்கேற்றி,
சாகரத்தின் மீதுவிடும்
     சாதுரியம் காட்டிடுவேன்.,
கூரை தனிலிருந்து
     குதித்துவிழும் தண்ணீரில
ஆராத முத்தொளிரும்

     அணியழகில் மெய்மறப்பேன்.