பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கலைமணி தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்கு அறிமுகமானவர். அவரது தமிழ்ப்பணியும் கலைப்பணியும் தமிழக வரலாற்றில் புகழ் அத்தியாயங்கள் என்று ஓர் அன்பர் கொன்னார். முற்றிலும் உண்மை.

தஞ்சாவூரில் அவர் உருவாக்கிய கலைக்கூடமும், தமிழ் மக்களுக்கு அவர் விட்டுச் சென்றிருக்கும் நூல்களுமே அதற்குச் சான்றுகளாகும்.

குற்றலமுனிவர் ரசிகமணி டி.கே. சி. யின் பிரதம சீடரான அவர் ஆக்கித் தந்துள்ள இலக்கியப்படைப்புகளும் கலைப்படைப்புகளும் தமிழுக்கும் கலையுலகுக்கும் கிடைத்த ஆரிய பொக்கிஷங்கள்.

ஆசிரியரது பிற நூல்கள்—————————————————

  1. வேங்கடம் முதல் குமரி வரை (ஐந்து பாகங்கள்)
  2. வேங்கடத்துக்கு அப்பால்
  3. இந்தியக் கலைச்செல்வம் (வானொலிக் கட்டுரைகள்)
  4. கலைஞன் கண்ட கடவுள்
  5. கல்லும் சொல்லாதோ கவி
  6. அமர காதலர்
  7. தென்றல் தந்த கவிதை
  8. தென்னாட்டுக் கோயில்களும், தமிழர் பண்பாடும்
  9. பிள்ளையார்யட்டிப் பிள்ளையார்
  10. தமிழறிஞர் வெள்ளகால் கப்பிரமணியமுதலியார்
  11. ரசிகமணி டி. கே. சி.
  12. மதுரை மீனாட்சி
  13. இந்திய கலைச்செல்வம்