பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

கம்பராமாயணம்



எதிர்பாராத விதமாய் வானத்தில் கருடன் பறந்து கொண்டிருந்தது; நிதானமாய்க் கீழே நடப்பதைக் கண்டது; சிறகுகளைக் குவித்துக் கொண்டு கீழே இறங்கியது; தன் சிறகுகளை அவர்கள் மீது விரித்துக் காற்றை வீசியது. அவர்கள் மீது கருடன் காற்று பட்டது; திருடனைத் தேள் கொட்டியதைப் போல நாகங்கள் நடுங்கின; கட்டு அவிழ்ந்து நெகிழ்ந்தன; செத்தவர் உயிர் பெற்றது போல இருவரும் விடுதலை பெற்றனர்.

‘இலக்குவன் இறந்திருப்பான்’ என்ற நம்பிக்கை யில் இந்திரசித்து அரண்மனையில் தங்கிவிட்டான். நாகங்களின் பிணிப்பில் அவர்கள் அகப்படவில்லை என்ற செய்தி இராவணனுக்கு எட்டியது; மகனை அவன் அறிவீனத்துக்காகக் கடிந்து கொண்டான்.

மறுநாள் போரில் இந்திரசித்து, வேகமாய்ச் செயல் பட்டான்; இலக்குவனொடு நேருக்கு நேர் சந்தித்துப் போ செய்தான்; நாகபாசம் ஏவித் தன் ஆகத்தைக் கட்டியவனை அயன்படை கொண்டு அழிக்க இலக்குவன் விரும்பினான் இராமன் “அஃது அறமன்று” என்று கூறித் தடுத்து நிறுத்தினான்; ‘அதே அயன்படையை இலக்குவன் மீது எறிவது’ என்று தீர்மானித்து, இந்திரசித்துக் களம்விட்( வெளி யேறினான்; ‘அவன் அஞ்சி ஒடிவிட்டான்’ என்று கணக்கைத் தவறாய்ப் போட்டுவிட்டனர்; அவன் அரண் மனைக்குச் சென்று, தந்தையைச் சந்தித்துத் திட்டத்தை பற்றிக் கூறினான்.

அயன்படை, பெறுதற்கு வேள்வி செய்ய வேண் இருந்தது; அதுவரை மகோதரனைப் போருக்கு அனுப்பி இலக்குவனைக் களத்தில் மடக்கி வைத்தனர்.