பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆனால் இதற்கு மாறாக, மனித இதயத்தின் உணர்ச்சிகளையும், பாவங்களையும், இயக்கங்களையும் வர்ணிக்கையில் கம்பன் வால்மீகியைத் தனக்குப் பின்னே வெகு தூரத்தில் நிறுத்திவிடுகிறான். இதற்கெல்லாம் பின்வரும் காண்டங்களில் தான் உதாரணங்கள் நிரம்ப அகப்படுமானாலும் பால காண்டத்திலும் அகப்படாமலில்லை. ஏன், பூக்கொய் படலம், உண்டாட்டுப்படலம், உலாவியல் படலம், பரகராமப் படலம் இவைகளிலுள்ள செய்யுள்கள் அனைத்தையுமே இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்விரு கவிகளினுடையவும் நடையைச் சீர் தூக்கிப் பார்த்தால், வால்மீகியின் ராமாயணம் திராக்ஷாபாகமாகும். அதன் ரஸத்தை அனுபவிக்க மிகுந்த சிரமம் வேண்டாம். நாக்கிற் பட்டமாத்திரத் திலேயே உருகிவிடும். கம்பனின் உத்பிரேக்ஷைகளும், புராதனக் கதைகளை மிகச் சூக்ஷ்மமாகச் ருசிப்பிக்கும் நடைகளும் மலிந்து கிடப்பதனால் அவனுடைய காவியம் அரைவாசிக்கு மதுபாகமாகச் செய்யப்பட்டது என்று சொல்லவேண்டும். தேன் திளைத்துப் பொங்கித் ததும்பிக்கொண்டுதான் இருக்கிறது; ஆனால் உத்பிரேக்ஷைகளாகிற வண்டுகளை ஓட்டிவிடவேண்டும்; தேனைப் பிழிந்தெடுத்துத்தான் சாப்பிடவேண்டியது போல, தொக்கி நிற்கிற கதைகளை வெளிப்படுத்திக் கருத்தைக் காணவேண்டும். ஆனால் கம்பராமாயணம் செம்பாதி திராக்ஷாபாகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இனி, கம்பனுடைய கவிதையை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால், அதன் சிறந்த குணம்