பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இன்னும் சும்பனுடைய கவிதை விஷயமாகச் சொல்லவேண்டியது எத்தனையோ இருந்தும் விரிவஞ்சி இதனோடு நிறுத்திக்கொள்ளுகிறோம். அயோத்தியா காண்டப் பதிப்பின் முடிவுரையில் இதைப்பற்றி விஸ்தாரமாகப் பேசுவோம்.

இப்பொழுது, இந்தப் பதிப்பைப் படிக்கிறவர்களுக்குக் கம்பராமாயணம் என்கிற தேவாமிர்தத்தை இதுவரையில் சுவைக்காமற் போய்விட்டோமே என்கிற அங்கலாய்ப்பும், இனியேனும் அதைப் பருகி அனுபவிக்கவேண்டும் என்கிற அவாவும் உண்டாகுமானால் நாம் கொண்ட நோக்கம் நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைவோம்.


————