பக்கம்:கரிகால் வளவன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

அதனால் அரசர் பிரான் இத்தனை பொன்னைப் பரிசாக அளித்திருக்கிறான்.”

“புலவர் பாடிய பாடல் நெடுங்காலம் நிற்கும்; புரவலன் வீரமும் அவன் பதினாறு நூறாயிரம் பரிசளித்த புகழும் இந்தப் பாட்டோடு நெடுங்காலம் வாழும்.”

இப்படிப் புலவர்களும் மற்ற மக்களும் பாட்டையும் பரிசையும் பற்றிப் பேசிப் பாராட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/93&oldid=1232514" இலிருந்து மீள்விக்கப்பட்டது