101
கதையையே பேசிக் காலத்தைக் கழிப்பார்கள். தொடக்கத்தில் மட்டுமா? இடையிடையேயும் வேண்டாதன பேசிக் காலத்தை வீணடிப்பார்கள். உப்புமா கிண்டுவதைப் பற்றி அரைமணி நேரமும்,புளிச்ச கீரை கடைவதைப் பற்றிஅரை மணி நேரமும் பேசுபவர்களும் உளர். பழமை பேசித் திரிவோர், அந்த நேரத்தில் வேறு நல்ல கருத்துகளைச் சொன்னால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?.
அதோ திருவாளர் உலகளந்த பெருமாள் வருகிறார்; அவரையும் சந்தித்துப் பேசிப் பார்ப்போம்.
“காலையிலே அண்ணன் எங்கே போய் வருகிறீர்கள்?
“எங்கே என்றா கேட்கிறீர்கள்? ஒட்டலுக்குத்தான் போய் வருகிறேன்.”
- ஏன், வீட்டில் அண்ணி ஒன்றும் பலகாரம் செய்யவில்லையா?”
“அவளா? இரண்டு நாளாய்க் காலையிலே வெறுங் காப்பி சாப்பிடுகிறேனே- இன்றைக்காவது உளுந்தும் அரிசியும் ஊறப் போட்டு மாவு அரைத்து நாளைக்கு இட்டலி செய்து கொடுக்கக் கூடாதா?-என்று நேற்று அவளைக் கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கு உடம்பு போதவில்லை; நீங்கள் மாவு அரைப்பதாயிருந்தால் உளுந்தும் அரிசியும் ஊறப்போடுகிறேன்!என்று கண்டிப்பாய்ச்சொல்லி விட்டாள். எத்தனை நாளைக்குத்தான் நான் அரிசியும் உளுந்தும் அரைத்துப் போடுவேன்? எனவே இன்றைக்கு ஒட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு வருகிறேன்’
"ஒகோ அப்படியா! அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்! வீட்டிலே என்றால் வெற்று இட்டலிதானே கிடைக்கும் ? ஒட்டலிலே நாலாவிதப் பலகாரங்களும் சாப்பிட்டுப் பார்த்திருப்பீர்களே!”