பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157


இங்கே பரிமேலழகரை மறுத்துள்ளதின் காரணம் 'இரவாதவர் கோடீசுவரர் ஆவர்’ என்னும் உண்மைக் கருத்து-அதாவது, ஆசிரியர் வள்ளுவர் சொல்ல எண்ணிய கருத்து நமக்குத் தெளிவாகக் கிடைக்காது'-என்பதேயாம். வேண்டுமானால் பரிமேலழகரின் உரைப்பகுதி முழுவதையும் இங்கே தருகிறேனே!:

‘தமக்கு உள்ளது கரவாது, இவர் வரப் பெற்றேம் என்று மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல், இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று என்றவாறு' -

பரிமேலழகர் உரையில், வள்ளுவனார் எண்ணிய கருத்து தெளிவுபடுத்தப்பட வில்லை என்பது புலனாகுமே! அவர் இரந்து செல்வம் எய்தலின் என்பதை வலிந்து வரவழைத்து எழுதியுள்ளார். வேண்டாத இந்த வலிந்த வரவழைப்பு இல்லையேல், அவரது கருத்து சரிவராது. எனவேதான், மாபெருஞ் சிறப்பிற்கு உரிய பரிமேலழகரை மறுத்து உண்மைக் கருத்தை உணர்த்த வேண்டியதாயிற்று.

உலகில் உண்மையான கோடீசுவரர்கள் உருவாவதற்கு எளிய முறையில் வழி வகுத்துத் தந்த வள்ளுவனார் புகழ் வண்தமிழுடன் வாழ்க!