பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

 ருப்பதுஎன்று பொருளாம். ஒவியத்திற்கு ஒவு, ஒவி, ஒவம் ஆகிய பெயர்களும் இலக்கியங்களில் உள்ளமை குறிப் பிடத்தக்கது.

(6.அ) சர்க்கரையின் இனிப்புச் சுவையைப் பல்வேறு இனிப்புப் பண்டங்களில்-பல்வேறு மாதிரிகளில் காண்பது போல, ஒப்புமைக்கலையைப் பல்வேறு கலைகளில்-பல்வேறு உருவங்களில் காண்கிறோம். அன்பே கடவுள்’ என்பது போல ஒப்புமையே கலைகள்’ என்று கூறிவிடலாம்போல் தோன்றுகிறது.

கருவிக்கலை (Tool Art):

(7) பேச்சுக்கலை, இலக்கியக்கலை, கற்பிக்குங்கலை முதலிய கலைகளின் வெற்றிக்கு ஒப்புமைக்கலை தக்க கருவியாய்ப் (ஆயுதமாய்ப்) பயன்படுகிறது. பேச்சாளரோ, எழுத்தாளரோ, இலக்கியப் புலவரோ, பாடம் பயிற்றும் ஆசிரியரோ, ஒப்புமைக்கலையின் உதவியின்றித் தம் தொழி லில் வெற்றி காணலரிது. இக்கலைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தை விளக்க, காலத்தோடு காலம்-இடத்தோடு இடம் -ஆளோடு ஆள்-பொருளோடு பொருள்-நிகழ்ச்சியோடு நிகழ்ச்சி ஆகியவற்றை ஒப்பிட்டுக்காட்டித் தம் தொழிலில் உயர்வு பெறுகின்றனர். எனவே தான், ஒப்புமைக்கலை ஒரு கருவிக்கலை’ எனப்படுகிறது.

வாழ்க்கைக் கலை:

(8) உயிர் வாழ்க்கையே ஒப்புமைக்கலையின் அடிப்படையின் மேல்தான் நடக்கிறது. குழந்தைகள் பிறரைப் பார்த்துப் பின்பற்றி அவர்கள் செய்வதுபோல் செய்து தான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர் களுங்கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ்கின்றனர்.சூழ்-