பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அப்போது, ரேடியோவில் சிறு சலசலப்பு நிகழ்ந்தது, அதற்குப் பின் இமைப் பொழுதின் மெளனத்துக்குப் பிற்பாடு, “ரேடியோ சிலோன்...வர்த்தக ஒலிபரப்பு !”'என்ற அறிவிப்பு கேட்டதுதான் தாமதம், விரைந்தெழுந்த சோமசேகர் பதட்டத்துடன் ரேடியோவை ‘சடக்’கென்று நிறுத்தினார். வேர்வை வழிந்தது !

அவருடைய இந்தப் பதட்டமான பரபரப்புச் செய்கையை கண்டு, ஒன்றும் புரியாமல் அப்படியே சிலையாக வீற்றிருந்தான், ஞானபண்டிதன்! பிறகு, அவன் பார்வை அவர் பேரில் நிலைத்தது.

அவரோ, குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லேயே !...