பக்கம்:கற்சுவர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8 கற்சுவர்கள்

வந்துட்டீங்க. வந்தவரை சரிதான். ஆனால் இதுக் கெல்லாம் கிளியர் கட்டா உங்களுக்கு ஒரு பதில் சொல்லப் போகிறேன் மிஸ்டர் சாமிநாதன்! இந்த அரண் மனைங்கிற பெரிய சத்திரத்தைக் கட்டிக் காக்க நாங்கள் எதை எதையோ தெரிஞ்சும் தெரியாமலும் வேளியிலே விற்கிறோம். சோப்புச் சீப்புக்காகப் பழைய வெள்ளிப் பாத்திரத்தை ரகசியமா விற்கிறவங்க, ஒரு பாக்கெட் ஸ்பென்ஸர் சுருட்டுக்காக அரண்மனைக் கருவூலத்திலிருந்து பழைய தங்க நகையை எடுத்து விற்கிறவங்க, முதல் வகுப்பு ரெயில் டிக்கெட்டுக்காக அரண்மனைப் பழையப் பாத்திரங் களை எடைக்கு எடை நிறுத்துப் போடறவங்க எல்லாரும் இன்னிக்கி இந்த உயரமான மதிற்கவர்களுக்குள்ளே இருக் கோம். எங்க மான அவமானங்கள் கஷ்ட நஷ்டங்களை வெளியே உள்ளவர்களுக்குத் தெரியவிடாமல் இந்த மதிற் அவர்கள் மறைத்து விடுகிறாற்போல அவ்வளவு உயரமாக - அந்தக் காலத்திலேயே முன்னோர்கள் இதைக் கட்டி வைத் திருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அரண்மனைக்குள்ளே நடக்கலாம். உயரமான கற்சுவர்களின் மறைப்பையும் மீறி வெளியே உள்ள உங்களைப் போன்றவர்களுக்கும் இங்கே நடப்பவை தெரிந்து விடலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு பெரியவிலை பேசினாலும் என்ன செய்தாலும் சிலவற்றை நான் இங்கிருந்து விற்கவிட மாட்டேன்.

இங்கே அரண்மனைக்குள்ளே இருக்கும் ரேர் புக்ஸ் அடங்கியப் பெரிய லைப்ரரி; மோகினி பெயிண்டிங்ஸ் உள்பட அருமையான ஒவியங்கள் அடங்கிய சித்திரசாலை, பிரமாதமான கலைப் பொருட்கள், பஞ்சலோகச் சிலைகள் அடங்கிய மியூலியம் இவை மூன்றை மட்டும் எக்காரணத் தைக் கொண்டும் எந்த விலைக்கும் விற்கமாட்டேன். என் உடலில் உயிர் இருக்கிற வரை மற்றவர்களை விற்க விடவும் மாட்டேன். இவை இந்தக் குடும்பத்தில் என்றோ ஒரு தலைமுறையில் இண்டெலக்சுவல்ஸ்' இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் மிகச் சிறந்த கலாரசிகர்கள் இருந்திருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/100&oldid=553072" இலிருந்து மீள்விக்கப்பட்டது