பக்கம்:கற்சுவர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 0 கற்சுவர்கள்

விருந்துக்கு எல்லா சினிமா நட்சத்திரங்களும் டைரக்டர் களும், சேதுராசன் சேர்வையின் சக விநியோகஸ்தர்களும் வந்திருந்தார்கள். மாமாவோ தனசேகரனோ முற்றிலும் எதிர்பாராத விதமாக நடிகை ஜெயநளினியும் கோமளிஸ் வரனும் கூட வந்திருந்தார்கள். ஜெயநளினி மிக மிகக் கவர்ச்சியாகவும் வசீகரமாகவும் சிங்காரித்துக் கொண்டு வந்திருந்தாள். எல்லோர் கவனமும் அவள் பக்கமே இருந் தன. விருந்தே அவளுக்காகத்தான் ஏற்பாடு செய்தது போலிருந்தது. சேதுராசன் சேர்வை அவளை எல்லார் முன்னிலையிலும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவது கலகலப்பாகச் சிரித்துப் பேசுவது என்று பரபரப்பாக ஓடி 'யாடிக் கொண்டிருந்தார். தனசேகரனும் மாமாவும் பட்டும் படாமலும் நடந்து கொண்டார்கள், ஜெயநளினி. சேது ராசன்சேர்வை, தனசேகரன், மாமா, நால்வரும் ஒரே டேபிளில் விருந்து அருந்திய போதிலும் பரஸ்பரம் ஹலோ" என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை. விருந்து முடிந்ததும் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பிறகு தனசேகரன், மாமா, ஜெயநளினி மூவரையும் வைத்துக் கொண்டு, 'கொஞ்சம் இருங்க! நாம் தனியே பேச வேண்டிய விஷயம் ஒண்னு இருக்கு' என்று ஆரம்பித் தார் சேதுராசன் சேர்வை. ஜெயநளினி மாமாவிடம் ஏதோ சிரித்துப் பேசத் தொடங்கியிருந்தாள். தனசேகரன் மனத் தில் அதைப் பற்றிக் கொஞ்சம் சந்தேகம் தட்டியது. தாங்க முடியாத கோபமும் வந்தது.

19

சேதுராசன்சேர்வை விருந்துக்குக் கூப்பிட்டது வேறு எதற்காகவோதான் இருக்கும் என்று தனசேகரனுக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது சரியாகிவிட்டது. மாமா தங்க பாண்டியன் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனசேகரனோ ஒரளவு எதிர்பார்த்திருந்தான். விருந்திலே நடிகை ஜெயநளினியையும், தண்டச் சோற்றுப் பேர்வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/212&oldid=553188" இலிருந்து மீள்விக்கப்பட்டது