பக்கம்:கற்பக மலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன் 39

LJüįį'L]ëëjiflu | AE6@ o_görLit?” (Eligibility for College Course) என்று கேட்கிருர்கள். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு நிறைவுற்றதற்குப் பயன் கல்லூரி நுழிைவு.

அவ்வாறே நூலறிவு பெற்றதன் பயன் வாலறிவு பெறும் துறையில் அடி எடுத்து வைத்தல். அந்தக் கல்லூரியின் தலைவன் வாலறிவனுகிய இறைவன். அவனே அடிவணங்கி அவ்வுலகில் புகவேண்டும். நூலறிவு மட்டும் பெற்றவர்கள் சிறந்த பயனைப் பெற்றவர்கள் ஆகமாட்டார்கள்.

'நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக’

என்பது காரைக்கால் அம்ம்ையார் திருவாக்கு. நூலறிவு மட்டும் பேசித் திரிபவர்கள் இறையருளின்ப உலகத்தில் நுழைய இயலாது. இறைவனேப் பணிந்து அவ்வுலகில் புகவேண்டும். ஆதலின் கற்ற அளவிலே எல்லாம் வந்துவிட்டதாக எண்ணுமல், கல்வியின் முடிவிலே வாலறிவு தொடங்குகிறது என்று உணரவேண்டும்.

வாலறிவாகிய மெய்யுணர்வு பெற்றவன், இறைவன் அடி தொழுது பிறவி யென்னும் துன்பத்தினின்றும் விடுதலே பெறுவான். அதுவே வீடு. கற்றவர் அறிவு' பெற்று இறைவன் அடி தொழுவர்; அடிதொழுவார் பிறவிப் பெருங்கடல் நீந்துவார். பிறவித் துன்பம் கடவுளேப் பணிந்து வாழ்தலால் நீங்கும் என்பதை இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளில் வைத்தார். -

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் മ്ലങ്ങ,ഇഖ് அடிசேரா தார். (10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/38&oldid=553249" இலிருந்து மீள்விக்கப்பட்டது