பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கற்பனைச்சித்திரம்



தான், பூபதியின் பெருமையைப் பூபதிக்குக் கவனப்படுத்தினார். பூபதிக்கு ஆனந்தம்; விடைபெற்றுக்கொண்டு வெளியே வரும்போது, தன் வீட்டிலே ஏதோ விசேஷத்துக்குச் சமயல் செய்த வேதாந்தாச்சாரி வரக்கண்டான் பங்களாவுக்குள். "ஐயர்! இங்கே என்ன வேலையாக வந்தீர்?” என்று பூபதி கேட்க, ஐயர் சிரித்துக்கொண்டே வேலையா? இது என், மருமான் ஆமன்னே!" என்றார் 'என்ன என்ன?' என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் பூபதி, "ஜெமீன்தார்வாள்! டிப்டிக் கலெக்டர் யாருன்னு நினைச்சீர். அவருக்கு என் தமயனாரின் மகளைத்தான் கொடுத்திருக்கு" என்று கூறிப் பந்துத்துவத்தை விளக்கினார் வேதாந்தாச்சாரி விளங்கவில்லை. கொஞ்சம் விபரீதமாகவும் இருந்தது அந்தப்பேச்சு, பூபதிக்கு, சூட்சமத்தைத் தெரிந்துகொண்டார் வேதாந்தாச்சாரி "ஓ அதனாலே மிரள்கிறீரா? டிப்டிக் கலெக்டர், எங்களவாதான் ஜெமீன்தாரவாள்! பெயர் J. ஈஸ், என்று இருக்கவே, கிருஸ்தவான்னு எண்ணிண்டீர் போலிருக்கு. J. ஈஸ், என்பது, ஜெகதீஸ் என்ற பெயரின், ரத்னச் சுருக்கம். அவர் பெயர் ஜெகதீசாச்சார். சீமையிலே, J. ஈஸ்னு பெயரை வைச்சிண்டார். உத்தியோகத்துக்கும் அதே பெயர், ஓட்டிண்டது, அவ்வளவுதான்" என்று விளக்கம் கூறினார். பூபதி, வேதாந்தாச்சாரியாருக்கு, வழக்கத்தை விடச் சற்று அதிகமான மரியாதைகாட்டிவிட்டு பூபதி மோட்டாரில் புறப்பட்டார் வீடு நோக்கி கோடீஸ்வரன், வேறு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுப் போய்விட்டான், "டாக்சியில்".

"பூபதி, பெரிய குடும்பம். நேக்கு அவா குடும்பத்திடம் ரொம்ப நாளாகப் பரிச்யம்" என்று கூறிக் கொண்டே, வந்தார், வேதாந்தாச்சாரி டிப்டி கலெக்டர், ஆனபிறகு உனக்கு இப்படிப்பட்ட சீமான்களின் சினேகம் கிடைத்தது. எனக்கு, இவர்களுடைய சினேகிதம் நெடுநாட்-