பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூபதியின் ஒருநாள் அலுவல்

15


போட்டு, பெட்ரோல் டின்னைக் கண்டுபிடித்து அதைத் தூக்கிக்கொண்டு வரும்படி வேறோர் கான்ஸ்டெபிளுக்கு உத்தரவு செய்துவிட்டு, கோபமாக உள்ளே நுழைய, அங்கே "ரைட்டர்" பூபதி எதிரே, நின்றுகொண்டிருக்கவும், பூபதி டி.எஸ்.பி. போல, உட்கார்ந்திருக்கவும் கண்டு, ஒரு களைப்பினால், ரைட்டரை, அவருடைய ஆசனத்துக்குத் துரத்திவிட்டு விசாரணையைத் துவக்கினார். பூபதி தன்னுடைய மிட்டாதாரர் நிலைமையை ஜாடை காட்டவே, சாப்ஜான், கோபம் அதிகரித்து பணக்காரர் என்றபதவி, ஏழைகளை மிரட்ட உதவுமே தவிரப், பொறுப்பாகவும், தயவு தாட்சணியம் பார்க்காமல் நேர்மையாகவும் நடந்து கொள்ளும், அதிகாரியை அடக்கப் பயன்படாது என்பதை விளக்கவேண்டும். காரசாரமாகப் பேசி, சார்ஜும் செய்து விட்டார்.

கோபம், ஆனால் யார் மீது காட்டுவது! பூபதி மோட்டாரை ஓட்டிக்கொண்டு, நேரே சப்-கலெக்டரிடமே போகலாமா, இந்த சப்-இன்ஸ்பெக்டரைப் பற்றிக் கூறிவிட்டு வருவோமோ, என்று எண்ணினார், பிறகு "பெட்ரோல் டின்" கவனம் வந்தது. நேரே பங்களா போவது, பிறகு என்ன செய்வது என்று யோசிப்பது என்று தீர்மானித்து, மோட்டாரைக் கொஞ்சம் குறைந்த வேகத்திலேயே ஓட்டிக் கொண்டு போனார். வழியிலே இரண்டு கூலிக்காரர்கள். மோட்டாரில் போகும் பூபதியைக் கண்டனர். அதிலே ஓருவன், கும்பிட்டான், பூபதியை. மற்றவன் "ஏன்? யார் அவர்?" என்று கேட்டான், கும்பிடு போட்டவன் சொன்னான்.

"மனுஷ ஜென்மமெடுத்தா, இப்படி எடுக்கவேண்டும். நாம் இருக்கிறோம் நாய் படாதபாடு பட்டுக்கொண்டு. அதோ பார்டா, போகிறான், மகாராஜன், புண்யசாலி, போன ஜென்மத்திலே, என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே, இவ்வளவு அந்தஸ்தோடு, வாழறான் கடவுள் கடாட்சமா" என்று, மற்றவன், அதை மறுத்தும்