பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110



புகுந்து வேட்டையாடவும், களம்புகும் போர்புரியவும் புறம் போவதல்லது, பிற்காலங்களில் அரசன் அரண்மனைப்புறம் வருதல் இல்லை. அரண்மனைக்குள் மெய்க்காவலர் சூழ, அவன் அடங்கியிருத்தல்வேண்டும் என்றே அக்கால அரசியல் நூல்கள் அறிவூட்டின. ஆயினும் ஒரு நாளில் ஒரு முறையாவது, மன்னன் அரியணையில் அமர்ந்து, காட்சிக்கு எளியனாய் இருந்து, தம் முறையீடுகளை நேரில் கேட்டு நீதி வழங்கவேண்டும்; குறைபாடுகளைக் கேட்டறிந்து அது தீர்க்கவேண்டும் என மக்கள் விரும்பினார்கள்,

மகதப் பேரரசை அளித்து, அதன் அரியணையில் அசைக்கமுடியாதவாறு தன்னை அமர்த்திய தன் நாற் படையைப் பெருமளவில் பெருக்குவதிலும், அப்படைக்கு வேண்டும் படைக்கலங்களை அளித்து, அணிசெய்து பேணிக் காப்பதிலும் விழிப்புடையனாய் விளங்கினான் சந்திரகுப்தன். படையைப் பேணிப் புரக்கும் பொறுப்பு ஐவர் அடங்கிய ஆறு ஆட்சிக் குழுவினர் பால் ஒப்புடைக்கப்பட்டிருந்தது. முதற்குழு கடற்படைத் தலைவன் துணைகொண்டு கடற்படை நிலையங்களைக் கண்காணித்தது. இரண்டாங்குழு படை செலவு, படை யுணர்வு, படைக்கலம் வழங்கல் ஆகிய பொறுப் பேற்றிருந்தது. மூன்றாவது குழுவினர் காலாட் படையையும், நான்காவது குழுவினர் குதிரைப் படையையும், ஐந்தாவது குழுவினர் தேர்ப்படையையும், ஆறாவது குழுவினர் காற்றுப் படையையும் கண்காணித்து வந்தனர்.

பாடலிபுத்ரம், தட்சசீலம், உச்சைனி போலும் மகத நாட்டு மாநகர்கள், ஆறு ஆட்சிக் குழுவினராகப் பிரிந்து பணிபுரியும் முப்பது உறுப்பினர்களால் ஆன நகராட்சி மன்றத்தால் ஆளப்பட்டு வந்தன. முதற்குழு கைத் தொழில் வளர்ச்சியில் கருத்துன்றியிருந்தது. வேலைக்குத் தகுந்த கூலி கெர்டுக்கவேண்டும்; கூலிக்குத் தக்க