பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


வாடிய அவர்கள் பிணியுற்று உழல்கின்றனர், கொள்ளை நோயால் உயிரிழந்தவர் எத்தனை ஆயிரவர் என்று எண்ணிக் கூறுவது இயலாது என்ற செய்தி தொடர்ந்து வரத் தொடங்கி விட்டது. உகிர்ச்சுற்றின் மேல் உலக்கை விழுந்தது போலவும் லெந்த புண்ணில் வேல் நுழைந்தது போலவும் ஆகி விட்டது அசோகனுக்கு. போரின் துணையால் பெறலாகும் வெற்றிப் புகழில் அவன் கொண்டிருந்த ஆர்வம் அறவே மறைந்து விட்டது, ஆற்றல், ஆண்மை என ஒயாது ஒலித்திருந்த அவன் உள்ளத்தில் அன்பு, அருள் என்ற இன் ஒலி எழுந்து விட்டது, போர் வெறி தணிந்து விட்டது, பேரருள் சுரந்து விட்டது, முற்றிலும் புதியவனாகி விட்டான் அசோகன, கன்னிப் போராய் விளங்கிய கலிங்கப் போரே அவன் கண்ட கடைசிப் போராகவும் ஆகி விட்டது, போர் நினைப்பை இழந்து புத்த நெறியில் புகுந்துவிட்டான் அப்ப்ோர் வீரன்!


æææ