பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கலீலியோவின்

அனுபவிக்கும் மிகப் பெரிய டெலஸ்கோப் தொலை நோக்கிக் கருவியே ஒரு முன்னோடியாக அமைந்தது.

கலீலியோ கண்டுபிடித்த முதல் டெலஸ்கோப் குழாய் இதுதான் என்று நினைக்கும்போது அதனைப் பார்த்த எல்லோரும் அவரவர் கண்களை அகல விரித்து ஆச்சரியப்படாமலா இருக்க முடியும்?

பேளமார் மவுண்ட் என்ற இடத்தில் இன்றை தினம் அமைத்துள்ள இருநூறு அங்குலம் உள்ள அந்த அற்புதத் தொலை நோக்கி; வெற்றுக் கண்களைவிட பத்து லட்சம் மடங்கு அதிக நோக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

வானியல் கண்டுபிடிப்பு மேதை கலீலியோ வெனிஸ், நகரில் சில நாட்கள் தங்கி இருந்தார். அந்த நகர சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலியோ கண்டுபிடித்தக் கருவிகளைக் கண்டு பாராட்டினார்கள். பிரமிக்கத்தக்க அவரது கண்டுபிடிப்புகளைப் போற்றி, அவரை ஊக்குவிக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதனால், அவர் பணியாற்றி வந்த பாதுவா பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியை, அவர் உயிருள்ள வரை வகிக்கலாம் என்ற உத்தரவை சட்டமன்றம் மூலமாக வெளியிட்டார்கள். அதே நேரத்தில் அவர் செய்து அந்த பணியின் போது பெற்று வந்த ஊதியத்தை இரண்டு மடங்காக அதிகப்படுத்தி வழங்கிட சட்டமன்றத்தினர் வழி செய்தார்கள்.

விண்ணில் உள்ள விந்தைகளை விளக்கமாகக் கண்டறிய தான் கண்டுபிடித்தக்கருவிகளை அவர் மிகச்சாதாரணமானதே என்று எண்ணினார். மேலும் பல கருவிகளை அறிய அதற்காக இடைவிடாமல் உழைத்து வந்தார்.

அவர் கண்டுபிடித்த டெலஸ்கோப் கருவி மூலமாக, ஒரு பொருளை எட்டு மடங்கு பெரிதாகப் பார்த்திட வழி கண்டார். பிறகு அதையே முப்பது மடங்குப் பெரிதாகப் பார்க்கும் கருவியாக மாற்றி அமைத்தார்.