பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

166

இனப்பெருக்கம்

கலந்து, இரட்டையெண் டிப்ளாய்டு) நிறக்கோல் களுள்ள சைகோட்டு (Zygote) அல்லது கருவணு என்னும் ஒரே அணுவாக ஆகலாகும். இப்படி ஆதலே அடுத்த விதைத்தூள் தலைமுறையில் தொடக்கத்தைக் குறிக்கிறது. இயற்கையில் உண்மையில் நடைபெறும் முறைகளில் ஐசோகமி (Isogamy) ஒப்புமைக் கலவி என்பதொன்று. இதில் பாலணுக்கள் பார்வைக்கு ஒரே தன்மையினவாக இருக்கின்றன. ஆண் அணுவென்றும் பெண் அணுவென்றும் பிரித்துச் சொல்ல முடியாமல் இருக்கின்றன. இது சில தாழ்ந்தபாசிகளிலும் ரைசோப் படம் 8. ரைசோப்பஸ் 1. புரோகாமிட்டாஞ்சியங்கள்: பாலணுக்கள் உண்டான பிறகு, 2. இளைய கருவணு 3. முதிர்ந்த கருவணு பஸ் (படம் 8) போன்ற சில காளான்களிலும் காணப் படுகிறது.மற்றொன்று அனைசோகமி (Anisogamy) வேற்றுமைக் கலவி எனப்படும். இது ஓவோகமி (Oo- gamy) அல்லது அண்டக் கலவி எனவும்படும். இதில் பெண் அணு இயங்காமல் நிலைத்திருக்கும் அண்டவணு என்பது. ஆண் அணு இயங்கக்கூடிய மிக நுண்ணிய தான விந்தணு. இந்த விந்தணு எண்ணிறந்த அளவில் உண்டாக்கப்படுகிறது. அண்டக் கலவியே உயர்தர உயிர்களில் பெரும்பகுதியானவற்றுள் பொதுவாக நடைபெறுகின்றது. அவற்றுள் இதுவே வீதியெனத் தெரிகிறது. பரிணாமகாலத் திட்டத்தில் விதையிலாப் பெருக்க மும் கலவா இனப்பெருக்கமும் நெடுங்காலம் நடந்து வந்தபிறகே, கலவியினப்பெருக்கம் தோன்றிற்று எனத் தெரிகின்றது.இம்முறை புதிய உயிரினங்கள் பரிணமிப் பதற்கு அவசியமான தாயினும், ஏதேனும் ஓரினம் நிலைத் திருப்பதற்கு இன்றியமையாததன்று. இரண்டு பெற் றோர் சம்பந்தப்பட்டிருப்பதனாலே, அவற்றினின்றும் தோன்றும் சந்ததிக்கு இரண்டு தொகுதியான பண்பு களிலிருந்தும் பண்புகள் அமைவதற்கு வழியுண்டா கின்றது. இதனாலே பரிணாமத்திலே வேறுபாடுகள் (Variation) உண்டாவதற்கு மிக்க இடம் ஏற்படு கின்றது. காரணமாக இயற்கைத் தேர்வு (Natural selection) தொழிற்படுவதற்குப் பலவித மான பண்புகளும் கிடைக்கின் றன. இந்த முறையினால் உண்டாகும் விளைவு என்னவென்றால், வேண்டத்தக்க குணங்கள் ஓரினத்தில விருத்தியடைந்து பாதுகாக்கப் படுதலும், வேண்டாதவை தாமாகவே வாழ்க்கைப் போராட்டத்தில் களைபோல நீங்கியொழிதலும் ஆகும். கலவி யினப்பெருக்கத்தால் விளையும் வேறு நலன்களும் உண்டு. வேற்று வழி விரவலால் ஏற்படும் கலப்பட வலிமை (Hybrid vigour) ஒன்று. விதையானது தனியாகத் தன் உரிமை வாழ்க்கையைத் தொடங்கு

வதற்கு ஏற்ற நிலைகள் உண்டாகும் வரைக்கும் பிஞ்சு விதையைத் தாயுயிரானது தன்னுள் அடக்கிக் காக்கக் கூடிய வாய்ப்பும் ஆற்றலும் உடைமை மற்றொன்று. தாவரங்களிலே பொதுவாகநிகழாத சிலவகை இனப் பெருக்க முறைகளையும் ஆங்காங்குக் காணலாம். உதா ரணமாகக் கன்னி யினப்பெருக்கம்; அதாவது பெண் அணுவானது ஆண் அணுவினால் கருவுறப் பெறாமலே ஒரு புதிய செடியாக வளர்ந்து விடுவது. இயற்கையாக நடக்கும் பல கன்னி யினப்பெருக்கங்களிலே பெண் அணு ஒற்றையெண் நிறக்கோலதன்று, இரட்டை யெண் நிறக்கோல்களுள்ளது. இதனால் நிறக்கோல் வட் டத்தில் மாறுதல் ஒன்றும் ஏற்படுவதற்கு வழியில்லை. லோயெபு, மீடு முதலிய அறிஞர்கள் ரசாயனப்பொருள் களாலும், நுண்மையான ஊசியால் குத்தல், அதிர்ச்சி உண்டாக்குதல் முதலிய கருவிச் (Mechanical) செயல்களாலும் கன்னி யினப்பெருக்கம் ஏற்படச் செய் திருக்கின்றனர். சில பெரணிகளிற்போலச் சில சமயங்களில் விதைத் தூள் தலைமுறையாகிய செடிகளிலிருந்து நேராகவே பாலணுத் தலைமுறையாகிய புரோதாலஸ் உண்டா கின்றது. இதற்கு அபாஸ்போரி (Apospory) அதா வது விதைத்தூளின்மை என்று பெயர். இன்னும் சில வற்றில் இதற்கு மாறான் அபாகமி (apogamy) என் னும் பாலணுவின்மை காணப்படுகிறது. அதாவது புரோதாலஸிலிருந்து பாலணுக்கள் உண்டாகாமல் ஒரு குருத்து எழுந்து, அது விதைத்தூள் தலைமுறையாகிய சாதாரணபெரணியாக வளர்கிறது.கலவாயினப்பெருக் கத்துக்கும், சற்று அசாதாரணமான இந்தக் கலவியினப் பெருக்க வகைகளுக்கும் எல்லையான வரையறையைக் காண்பது கடினமாகவே இருக்கிறது. உண்மையில் இனப்பெருக்கச் செயல் முறைகளைப் பகுத்துப் பார்த் தால், எல்லாவித இனப்பெருக்கங்களும் மிக எளிதான தும் முதற்கண் உள்ளதுமான பிரிவுச்செயலின் பரி ணாமங்கள் தாம் என்பது தெரிகிறது. ஏ.டி.ஏ.கோ. விலங்கு இனப்பெருக்கம் கலவியிலா இனப்பெருக்கம் : ஓரணுப் பிராணி களினிடம் ஆண்பால், பெண்பால் என இருவகுப்புக்கள் இல்லை. அவற்றின் உடலின் பருமனுக்கும் பரப்புக்கும் பொருத்தமான ஒரு வரையறையுண்டு. அந்த வரை யறையை அடைந்தவுடன், இனப்பெருக்கச் செய்கை நிகழும். ஆகவே முழு வளர்ச்சி நிலைதான் அவற்றிற்கு அச் செய்கை வந்துறும் தருணம். இதற்கு அமீபா சிறந்ததோர் எடுத்துக் காட்டாகும். அமீபா தன் உடல் வளர்ச்சியின் உச்சநிலையை எட்டின வுடன், அதன் உட்கரு (Nucleus) இரு பகுதிகளாகப் பிரிகின்றது. பின்னர் உட்கருவைச் சுற்றியுள்ள உயிர்ப்பொருள் (Cytoplasm) இரண்டு துண்டுக ளாகப் பிளவுபடுகின்றது. உயிர்ப்பொருள் துண்டொன் றும் உட்கருவின் துணுக்கு ஒன்றுமாகச் சேர்ந்து இரண்டு அமீபாக்கள் உண்டாகின்றன. எல்லா ஒற்றை யணுப் பிராணிகளின் இனப்பெருக்கமும் இவ்வாறா கும். சிற்சில சிற்றுயிரான பலவணுப்பிராணிகளிலும் இருபாலற்ற இனப்பெருக்கம் ஒரோவழி நிகழ்கின்றது. உதாரணம்: சிலென்டரேட்டா (Coelenterata) என்னும் குழியுடலி வகுப்பைச் சார்ந்த ஹைடிரா என் னும் சிற்றுயிர், கடற்பஞ்சு, தட்டைப் புழுக்கள், நட் சத்திர மீன் முதலியன. ஹைடிரா : இச்சிறிய பச்சைநிறம் வாய்ந்த பிராணி சென்னையில் சிற்சில நீர் நிலைகளில் அகப்படுகின்றது. நல்ல தண்ணீரில் வாழும் புற்பூண்டுகளுடன் கலந்து